புதன், ஜூன் 18, 2025

‘வதை’ சிறுகதை

வைத்தியநாதர் அவர்களால் பிப்ரவரி 1926 இல் தொடந்தகபட்ட ஆனந்த விகடன் அடுத்த மாதம் நூறாவது ஆண்டை எட்டுகிறது. தொடங்கிய அடுத்த ஆண்டு பதிப்பிக்க நிதி பற்றாக்குறையால் துவண்ட பொழுது, 1927 இல் பத்ம பூஷண் எஸ்.எஸ்.வாசன் அவர்களால் 200 ரூபாய்க்கு (ஒரு எழுத்துக்கு 25 ரூபாய், 8x25=100) வாங்கபட்டு, புத்துயிரூட்டி புது வடிவத்துடன் இன்றளவும் நம்பர் ஒன் வார இதழாக வலம் வந்து கொண்டிருக்க்கிறது.

கல்கி, சுஜாதா என்று ஆகப் பெரும் ஆளுமைகள் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்கள். இன்றைய தேதியில் தோராயமாக ஐந்து லட்சம் பிரதிகள் (print) விற்பனையாகின்றன. ஆன்லைனிலும் சேர்த்து 34 லட்சம் வாசகர்கள் வாசிக்கிறார்கள்.





இன்று அந்த ஐந்து லட்சம் வாசகர்கள் கையில், நான் எழுதிய ‘வதை’ சிறுகதை (1356 வார்த்தைகள்) தவழும் என்று நினைப்பே மிகப்பெரும் உவகையளிக்கிறது. கோபாலகிரிஷணனுக்கு காத்திருக்கும் மயில் போல கதை எழுதி அனுப்பி விட்டு வாராவாரம் காத்திருந்தேன். ‘அந்த நாளும் வந்திடாதோ’ என்பது போல் இன்று அந்த நாள் வந்துவிட்டது.
மிதக்கும் கொள்கையை ஆர்ச்சிமிடீஸ் கண்டுபிடித்தபொழுது ‘யுரேக்கா’ என்று கத்திகொண்டு ஓடியதை போல் ஓட வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ் நாள் முழுவதுக்கும் நான் பொத்தி வைத்து பாதுக்கக்கவேண்டிய பொக்கிஷ இதழ்.
தேர்வுக்குழுவிற்கு நன்றியும் அன்பும். ஓவியம் வரைந்து உயிரோட்டமாகிக்கிய பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நண்பர்கள் படித்து பார்த்து கருத்துரையுங்கள்.
வீடு பேரு அடைந்துவிட்டது போன்றதொரு மட்டற்ற மகிழ்ச்சி.

பணிவு அல்லது சம மரியாதை கொடுத்தல்

பணிவு அல்லது சம மரியாதை கொடுத்தல்

பார்த்தவரையில், மூத்த நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களிடம் ஏதேனும் ஒரு கேள்வி அல்லது தகவல் டைப் செய்து அலைபேசியில் கேட்கும் அல்லது சொல்லும் பொழுது ப்ராம்ப்ட்டாக ஒரு பதில், ஏற்றுக்கொண்டதாகவோ அல்லது மறுதலித்தோ, என்று ஏதேனும் ஒரு மறுவினை கிடைத்துவிடுகிறது. அதே எதிர்வினையை, சம வயது அல்லது இளையோரிடம் எதிர்பார்க்க முடியவில்லை. அது அவர்களுக்கான உதவியாகக் கூட இருந்தாலும். குறிப்பாக இந்த ஜென் Z கிட்ஸ் இதில் பிரதமம். ஒன்று இரண்டு பேரிடம் பேசி இந்த முடிவுக்கு வரவில்லை. 90 சதவீதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ளேயும் இதே போல் தான் நடந்து கொள்ளுகிறார்கள். டெதரிங் என்பது துளியும் இல்லை. அதாவது ரிலேஷன்ஷிப்பில் ஒரு பிடிப்பு அல்லது பிணைப்பு. 'நீ பூமர் ஆகிவிட்டாய். இவ்வளவு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை' என்று கூறினால், கண் முன் இருக்கும் சக மனிதர்களிடம் சொந்தம் கொண்டாட முடியாதவர்கள் எங்கு போய் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாமே மெய்நிகர் என்றாகிவிட்டது போல. ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
சைதாப்பேட்டையில் இருந்து பார்க் வரை செல்லும் தாமப்ரம் பீச் வண்டி. தினமும் 7 .17க்கு சைதாப்பேட்டையில் ஏறினால் 7.40க்கு பார்க். அங்கிருந்து இறங்கி சென்ட்ரல் சபர்பன் ஸ்டேஷன் மாற வேண்டும். பார்க் ஸ்டேஷனில் அவ்வப்போது டிக்கட் செக்கிங் நடக்கும். கம்பெனியில் இருந்து பர்ஸ்ட் கிளாஸ் சீசன் டிக்கட் கொடுத்து விடுவார்கள். பர்ஸ்ட் க்ளாசில் நான்கே நான்கு சீட் தான் இருக்கும். குஷன் சீட். அது ஒன்று தான் வித்தியாசம். மற்றபடிக்கு கூட்டம் கம்மி என்பதைத்தவிர அதில் வேறு எந்த வித்தியாசமம் கிடையாது. லேடிஸ் கோச்சுடன் அட்டாச் ஆகியிருக்கும். முக்கால் வாசி லேடிஸ், கால் வாசி பர்ஸ்ட் க்ளாஸ் என்று ஒரு அமைப்பு அது. அந்த கோச் எல்லா ஸ்டேஷனில் படிக்கு அருகில் அளந்து வைத்தாற் போல் நிற்கும்.
ஏன் இதை சொல்கிறேன் என்றால் அவ்வப்போது இது பர்ஸ்ட் கிளாஸ் என்று தெரியாமல் சிலர் ஏறிவிடுவார்கள். படியில் இருந்து இறங்கி ஓடி வந்து வண்டி பிடிக்கும் அவசர கதியில் இதை பார்க்காமல் ஏறி விடுவார்கள். டாஸ்மாக் தெரு மூக்கில் நின்று பிடிக்கும் போலீஸ் போல டிக்கட் செக்கிங்கும் சரியாக இந்த கோச் அருகில் தான் நடக்கும். கேஸ் பிடித்தால் 500 ரூபாய் அபராதம். அதானே அவர்கள் வேலை.
ஒரு முறை என்னை பிடித்துவிட்டார்கள். பிடித்தார்கள் என்றால் நிப்பாட்டி கேட்பது. அவ்வளவே. அதுவே எனக்கு சுரீரென்றது. டிக்கட் வைத்திருக்கிறேனே என்னை ஏன் கேட்கிறார் என்ற ஒரு சலிப்பு நான் பர்ஸ்ட் க்ளாஸ் டிக்கட்டை எடுத்து காண்பிக்கும்போது எனது முகத்தில் இந்த உணர்வு அவருக்கு தெரிந்திருக்கிறது. அகத்தின் அழகு முகத்திலே. டிக்கட்டை வாங்கி பார்த்த அவர் என்னை அழைத்து அருகில் இருக்கும் ஒரு பென்ச் பக்கமாக நிற்க வைத்தார். ஒரு நிமிடம் என்றவர் இன்னும் இரண்டு மூன்று பேரிடம் சோதனை செய்த்துவிட்டு என்னிடம் திரும்பினார். 'என்ன படித்திருக்கிறாய்? எங்கு வேலை பார்க்கிறாய்?' போன்ற கேள்விகளை கேட்டுவிட்டு 'படித்த பண்புள்ளவனுக்கு அழகு பணிவு தான். எவ்வளவு உயரம் சென்றாலும் பணிவாக இருப்பதை மறக்காதே' என்று திருக்குறள் போல் இரண்டே வரிகளில் கூறிவிட்டு அகன்று விட்டார். கேட்டபொழுது கடுப்பாக இருந்தாலும் அவர் கூறிய விதம், அங்கிருந்து வெளியே செல்லும் படிகளில் இறங்கும் நேரம் யோசிக்க வைத்தது.
இந்த அனுபவ பாடத்தை அந்த வயதில் அந்த நேரத்தில் அந்த பிளாட்பாரத்தில் அவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றிருந்திருக்கிறது. பதினாறு வருடங்கள் கடந்தோடிவிட்டாலும், பசுமரத்தாணி போல் இன்றும் மறவாமல் இருக்கிறது. அலுவலகம் உள்ளே வெளியே, பேருந்து, சாலை, ஆட்டோ, பால்காரர், துப்புரவு தொழிலாளர்கள், டேபிள் துடைப்பவர், வாட்ச்மென், தள்ளுவண்டி வியாபாரி, மேலே கீழே என எல்லாரிடமும் ஒரே மாதிரியான பணிவுடன் உரையாட கற்றுத்தந்திருக்கிறது. இந்தப் பணிவே பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் அனுகூலமாய் இருந்திருருக்கிறது.
கற்றல் இனிது.

சிக்கந்தர் கா முக்காதர், மிஸ் யு

சிக்கந்தர் கா முக்காதர்.

ஜிம்மி ஷெர்கில், அவினாஷ் திவாரி மற்றும் தங்கக்குயில் தமன்னா நடிப்பில் வெளிவந்த ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் மூவி. வைர நகை கண்காட்சியில் வைரங்கள் காணாமல் போய்விடுகிறது. உள்ளுணர்வை மட்டுமே நம்பி நூறு சதவீத டிடெக்ஷன் ரிக்கார்ட் வைத்திருக்கும் ஷெர்கில், அதே தன் உள்ளுணர்வின் பேரில் மூவரை சந்தேகிக்கிறார். ஷெர்கில்லுக்கும் திரிக்கும் நடக்கும் டாம் அண்ட் ஜெரி ஆட்டமே இந்த சிக்கந்தர் கா முக்காதர்.பரபர பின்னணி இசை திரைக்கதைக்கு நல்ல ஒரு உறுதுணை. வன்முறை, கசமுசா காட்சிகள் இல்லாத ஒரு க்ளீன் என்டர்டெயினர். நெட்பிலிக்சில் இருக்கிறது.




மிஸ் யு
சாக்லேட் பாய் சித்தார்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் ரொமேன்டிக் காதல் கதை தான் மிஸ் யு. ரொம்ப நாள் கழித்து பார்த்த ஒரு நல்ல காதல் திரைப்படம். ஆரம்ப காட்சி அடிதடி என்று ஆரம்பித்ததும் இன்னொரு ஆக்ஷன் படமா என்று எண்ணினால் முற்றிலும் ரொமாண்டிக்கான ஜானரில் படம் விரிகிறது. சிரிப்புக்கு கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் என மூன்று பேர் இருந்தாலும் சித்தார்த்தின் பஸ் காமெடி நல்ல கிச்சுகிச்சு. விவாகரத்தான மனைவியையே மீண்டும் காதலித்து கரம் பிடிக்கும் கதை புதுசு. நல்லதொரு வீக் எண்ட் பேமிலி வாட்ச். பிரைமில் இருக்கிறது

RRR மேகிங்

RRR மேகிங் டாக்குமெண்டரி பார்த்த பின்பு இன்னும் ஒரு முறை பார்க்கலாம் என்று தேடியதில் நெட்பிளிக்சில் ஆங்கில மொழி மட்டும் கிடைத்தது. மாமாவுக்கு அவ்வளவு வெறி என்பது போல் ஆங்கிலத்திலேயே பார்த்தாகிவிட்டது. வேற்று மொழியில் பார்க்கும்போதும் எமோஷனில் கொஞ்சமும் குறைச்சல் இல்லை. கூடவே ஆக்ஷன் காட்சிகளும் மீண்டும் அதகளம். சென்டிமென்ட் என எல்லா ஏரியாவும் எப்படி சிக்சர் அடித்தார் என்று யோசிக்கும்போது தான் டாக்குமெண்டரியில் ராஜமௌலி கூறிய ரகசியம் ஞாபகம் வந்தது. எந்த ஒரு உணர்வு, நட்பு காதல் கோபம் பழி வாங்குதல் என எது என்றாலும் அதை எப்படி ஆக்ஷன் காட்சிகளாக மாற்றுவது என்று தான் யோசிக்கிறார். நம் உள்ளிருக்கும் ஹீரோவை உணர்வுப்பூர்வமாக வெளிக்கொணரும் அந்த நொடி தான் ராஜமௌலியின் வெற்றி மொழியாக இருக்கிறது. படம் பார்க்கும் நேரம் முழுவதும் அதே நொடி தான் பீறிட்டு நிற்கிறது. அதுவே வெள்ளையர்களை ஸ்டேஜில் ஆட்டம் போட வைத்திருக்கிறது.




RRR Behind & Beyond

RRR Behind & Beyond

ஒரு கதையை கன்சீவ் செய்து அதை உலகமே பாராட்டும் ஒரு பர்பேக்ட் பிராடக்டாக மாற்றும் வித்தை ராஜமௌலிக்கே உரியது.
இந்த டாக்குமெண்டரி RRR உருவான விதத்தை பேசுகிறது. மௌலி எந்த எமோஷனையும் ஆக்ஷன் சீக்வன்சாக எடுக்க ஆசைப்படுகிறார். உதாரணமாக fire மற்றும் water என்று இரு கேரக்டர்களை அறிமுகப்படுத்தியாச்சு. இருவரும் முதல் முறை சந்திக்கும் ஒரு சீன். சாதரணமாக காஃபி ஷாப்பில் சந்திக்க வைக்க முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அந்த ஆக்ஷன் சீன் தான் இருவரும் சந்தித்துக்கொள்ளும் பிரிட்ஜ் சீன். Miniature CG set green mat எனப் பல உத்திகளை கையாண்டு ஒரு மாதத்திற்கு மேல் எடுத்திருக்கிறார்கள். எத்தனை பேர் எத்தனை குழுவாக அதற்கு உழைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் போதே பிரமிப்பாக இருக்கிறது.




உச்சமாக LA இல் உள்ள சைனீஸ் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஸ்டேஜில் நாட்டு நாட்டு பாடல் ஆடியதெல்லாம் அமெரிக்கா வரலாற்றிலேயே இல்லை. அப்படி ஒரு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.
இதுவரை நான் எடுத்திருக்கும் பன்னிரெண்டு படங்களில் எந்த ஒரு சீனையும் எடுக்க முடியாமல் போகுமோ என்று சந்தேகப்பட்டதே இல்லை. என் கதையின் மேல் மற்றும் என் மேல் உள்ள நம்பிக்கையை நான் என்றுமே இழ்ந்ததில்லை என்கிறார் மௌலி.
வாழ்க்கைக்கான பாடம் இது.

சீப்ரா, போகன்வில்லா, சொர்க்கவாசல்

 சீப்ரா

பேங்கிங் த்ரில்லர் படம் . ஹீரோ சத்தியதேவுக்கு சமமாக ஒரு கேரக்டர். வில்லன் என்று சொல்வதா அல்லது குணச்சித்திர பாத்திரம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. தனஞ்சயனுக்கு அப்படி ஒரு மாஸ் பில்டப். ஹீரோவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு கெத்தான ரோல் கூடவே நம் கட்டப்பாவும் முக்கிய கேரக்டரில். குசும்பான ரவுடியாக சுனில். டெம்ப்லேட் பேங்க் மேனஜராக சுரேஷ் மேனன், ப்ரியா பவனி சங்கர் என பட்டாளம் ஜாஸ்தி. காமெடிக்கு சத்யா. மது வடலரா படத்தில் கலக்கியிருப்பாரே, அவர் தான். என்னது இன்னும் மது வடலரா பார்க்கவில்லையா? இன்றே பார்த்து விடுங்கள். ரவுடிகள் இருப்பதால் ரத்தம் தெறிக்கிறது. ஒரு கிளப் டேன்ஸ் பாடல் போனஸ். பேங்க் த்ரில்லர் ஜானரில், இரண்டு பேர் ஆடும் இந்த சதுரங்க ஆட்டம், ஒரு பெஸ்ட் வீக்கெண்ட் வாட்ச் மூவி. ஆஹா
OTT தளம்.



போகன்வில்லா
குஞ்சுக்கா போபன் மற்றும் பஹத் கூட்டணியில் சேட்டன் கரையிலிருந்து மற்றுமொரு மிஸ்டரி த்ரில்லர் மூவி. குஞ்சுக்க போபனின் மனைவியாக ஜோதிர்மயி. அம்னீசியா பேஷண்ட். ஒரு அமைச்சரின் மகள் காணாமல் போகும் சம்பவத்துக்கும் போபனின் மனைவி ரீத்துவுக்கும் சம்பந்தம் இருப்பதாக போலீஸ் நம்புகிறது. தேனீ மாவட்ட டி.எஸ்.பியாக பஹத். ரீத்துவிடம் விசாரணையைத் தொடங்கும் இடத்தில் இருந்து அதிகரிக்கும் முடிச்சுகள் ஒரு மர்மமான பரபரக்கும் கதையாக திரையில் விரிகிறது. குற்றவாளி யார் என்பதை இரண்டாம் பாதி தொடக்கத்தில் கூறிவிட்டாலும் ரீத்துவின் மர்மம் இறுதியில் தான் அவிழ்கிறது, போகன்வில்லா பெயின்டிங், வீடு, குளியலறை, பார்ம் ஹவுஸ் ஆகியவையம் கதாபாத்திரமாக மிளிர்கின்றன. சோனி தளத்தில்.
சொர்க்கவாசல்
1999ல் நடந்த மெட்ராஸ் மத்திய சிறை கலவரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது சொர்க்கவாசல். என்ன நடந்தது என்பதை விவரித்திருந்தால் டாக்குமென்டரியாக மாறியிருக்கும். ஆனால் அதை ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையாக மாற்றிய விதத்தில் அறிமுக இயக்குனர் சித்தார்த் நம்மை சிறை பிடிக்கிறார். ரஞ்சித் பட்டறை. காத்திரமான கதாபாத்திரத்தில் கருணாஸ், ரவுடி சிகாவாக செல்வராகவன், ஜெயில் குக்கராக பாலாஜி சக்திவேல், விசாரணை அதிகாரியாக நட்டி, சானியா ஐயப்பன் என நடிகர் பட்டாளம். சந்தர்ப்பவசத்தால் கொலையாளியாக பட்டம் சுமத்தப்பட்டிருக்கும் சாமானியனின் வாழ்வில் விளையாடும் எஸ்.பி, வார்டன், சிகா, எம்.எல்.ஏ என அரசியல் சூழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக கதை நகர்கிறது. பல இடங்களில் ஜெயில் தத்துவங்கள், சுரீர் என உரைக்கினறன. பார்த்திபனாக ஆர்.ஜெ பாலாஜி ஒரு முழு நடிகனாக உருமாறியிருக்கிறார். சொர்க்கவாசல் அவரது கேரியரில் மைல்கல். பல உணர்வுகள் பிரதிபலித்து டிஸ்டின்க்ஷன் ஸ்கோர் செய்கிறார். வெளிவரமுடியாமல் இயலாமையில் அவர் கதறும் காட்சி ஒரு சோறு பதம். கருணாஸ் சொல்வது போல் நரகத்தில் ஹீரோவாக நாம் இருப்பதை விரும்பாமல் தான் சொர்க்கத்தில் மண்டியிட்டுக்கொண்டிருக்கிறோம் என எண்ணத்தோணுகிறது. நெட்பிலிக்ஸ் தளத்தில்.

ஒரு நல்ல எழுத்து

ஒரு நல்ல எழுத்து என்ன செய்ய வேண்டும். சிந்தனையைத் தூண்ட வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நல்ல உதாரணம் வெ. நீலகண்டன் அவர்கள். மற்றவர்கள் எல்லாம் தேடித்தேடி பிரபலங்களை பேட்டி எடுக்கும் வேளையில், எளிய சாதனை மனிதர்களின் விலாசமாக இவர் பரிமளிக்கிறார். பேட்டி கொடுப்பவருக்கு மட்டுமல்ல, வாசிப்பவருக்கும் ஒரு உந்துதல் கொடுப்பது தான் இவரது எழுத்து. Weekly motivation.
அப்படியான ஒரு எழுத்தை கடந்த வாரம் வாசிக்க நேர்ந்தது.
Nokiya Medha என்பவர் விகடனில் எழுதிய 'அந்தக் கண்ணீர் தான் தொடர்ந்து இந்த வேலையை செய்ய வைத்தது' என்னும் கட்டுரை தான் அது.







சென்னை கோட்டூரில் உள்ள புற்றுநோய் மைய்யத்தில் ஸ்ரீ கோமதி என்னும் பெண்மணி பல வருடங்களாக அங்கு சிகிச்சைக்கு வருபவர் மற்றும் உறவினர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கணவர் இல்லாமல் மூணு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டிருக்கிறார். கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை தன் குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து பின்பு தண்ணீரை மட்டும் குடித்து விட்டு அடுத்த பொழுது நல்ல படியாக புலராதா என்னும் நிலையில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட வறுமையிலும் ஒரு நாள் ஒரு பாட்டிக்கு உணவு அளித்திருக்கிறார். அதுவே இரண்டு மூன்று என்று மாறி இன்று 150 பேர் என்றாகியிருக்கிறது. தினமும் தருகிறார். நோய் வாய்ப்பட்டவர்களுக்கு வெண்ணை கலந்த தயிர் சாதம். மற்றவர்களுக்கு மிளகு புதினா கறிவேப்பிலை என்று ஒரு கலவை சாதம். முகம் தெரியாதோர் மளிகை சாமான் கொடுக்க இவரது அரும்பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. குறைந்த பட்சம் 500 பேருக்காவது கொடுக்க வேண்டும் என்று உயரிய நோக்கத்தினுடன் செயல்படுகிறார்.


இதன் உந்துதல் பேரில் இன்று முதல் முறையாக 30 தயிர் சாதம் பாக்கெட்டுகள் பேக் செய்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தோம். வாங்க ஆள் இருப்பார்களா என்று சந்தேகத்துடன் சென்ற நிலையில் முப்பது நொடிகளுக்குளாக எல்லாம் காலி. சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு பக்கம் கட்டிச்சென்ற சாதம் வீணாகவில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம் இத்தனை பேர் உணவில்லாமல் தவிப்பது துயரம். புத்தாண்டு அன்று நூறு கட்டிச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறோம்.
இந்தக்கட்டுரை என்னில் எப்படி ஒரு மாற்றத்தை உண்டு செய்ததோ அது போல் உங்களிடம் இந்த பதிவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தட்டும்.
இயலும் வரை தர வேண்டும். ஒரு வகையில் அது தானே சமநிலை.

Girls will be Girls (18+)


பெண்மை மொழி பேசும் கமிங் ஆப் ஏஜ் ஜானரில் வெளிவந்திருக்கும் படம்.
வளரிளம் பருவத்தில் இருக்கும் பெண் தன்னிடம் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உணர்வுபூர்வமாக கையாண்டிருக்கிறது இந்த Girls will be Girls திரைப்படம்.



வளரிளம் பெண்ணாக ப்ரீதி பனிக்ரஹி. கொஞ்சம் பிசகினாலும் ஜானர் மாறிவிடும் இந்த கதையை இயக்குனரின் செவ்விய படைப்பாக மாற்றியதில் பெரும் பங்கு ப்ரீத்திக்கு. பெண்மை, பேரார்வம், பாலுணர்வு, கட்டுக்கடங்காத கோபம், முறுக்கப்பட்ட பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம் மற்றும் இறுதியில் ஆறுதல் எனப் பல உணர்வுகளை அனாயாசமாக கடத்தி இருக்கிறார் ப்ரீதி. அதுபோல், கதையின் வீரியம் கருதி ஷூட்டிங் ஸ்பாட்டில்பெண்கள் பாதிப்பாக உணரும் பொருட்டு, டெக்னீசியன்கள் பலரை பெண்களாக இயக்குனர் டலாட்டி நியமித்திருக்கிறார். கொசுறு செய்தி. பிரீதியின் அம்மாவாக வரும் கனி நடித்த ‘all we imagine as light’ கேன்ஸ் விருதை தட்டி வந்திருக்கிறது.
Girls will be Girls திரைப்படமும் பல சர்வதேச விருதுகளை அள்ளி வந்திருக்கிறது.
பிரைமில் கிடைக்கிறது

பகீரா 2024


2023 இல் வந்த பிரபு தேவா பகீராவுடன் இதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.
2024 இல் வந்த கன்னட மொழிப் படம். நேர்மையாக உதவி செய்ய முடியாத போலீஸ் ஆஃபிசர், ஒரு சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து அசுரர்களை வதம் செய்தால், அதுவே பகீரா.



படம் முழுக்க ஶ்ரீ முரளி தான். 43 வயதில் நல்ல உடல்கட்டுடன் படம் மொத்தத்தையும் தாங்கியிருக்கிறார். கிராஃபிக்ஸ், மேக்கிங், ஸ்டைல் என்று எதிலுமே குறையில்லை. கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல். வெறும் சூப்பர் ஹீரோ என்று மட்டுமல்லாமல் ஒரு நல்ல கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
தேடிப் பார்த்தால் கதை எழுதியிருப்பது பிரஷாந்த் நீல். கேஜிஎஃப் இயக்குனர். வீக்கெண்டிற்கு ஒரு நல்ல வாட்ச்.
நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம்