பார்க்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஒரே காரணம் கதாசிரியர் தமிழ். பார்க்க வேண்டாம் என்று மனம் தடுத்ததற்கு ஒரே காரணம் ஆஸ்கர் நாயகன் விக்ரம் பிரபு தமிழ், சினிமாவிற்கு வரும் முன் ஒரு போலீஸ் அதிகாரி. சொல்வதற்கு அத்தனை கதைகள் வைத்துள்ளார். டாணாக்காரன் ஒரு சோறு பதம். அவர் எழுதிய கதை தான் சிறை. அவர் சிறை அதிகாரம் என்ற வரிசையில் படங்கள் எடுக்கலாம். ஒரு சிறைக்கைதியை எஸ்கார்ட் செய்து நீதிமன்றம் அழைத்துச் செல்ல வேண்டும். நீதிமன்றம் சென்று சேரும் வரை அத்தனை பதைபதைப்பு. பார்வையாளனின் அனைத்து யூகங்களையும் தவிடுபொடியாக்கி உண்மைக்கு அருகில் ஒரு படைப்பைக் கொடுத்துள்ளனர். படம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே குற்றம் சாட்டபட்டவரின் மீது நாம் வைக்கும் முன்முடிவுகள் நாம் யார் என்பதை அறியும் ஒரு வாய்ப்பு. அனிஸ்மா மற்றும் அக்ஷய் குமாரின் நடிப்பு கதைக்கு பெரும் பலம். லியோ தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் தான் அக்ஷய். அனிஸ்மா மலையாள தேசத்து நாயகி.
விக்ரம் பிரபு இந்த முறை ஏமாற்றவில்லை. ஆனால் அதே விறைப்பான தோரணை. ஏட்டையா கதாபாத்திரம் என்பதால் அளவெடுத்து தைத்தது போல் பொருந்துகிறது. சக ஊழியனுக்காக டூட்டி பார்க்கும்பொழுது மனதைத் தொடுகிறார். இறுதி காட்சியில், நீதிமன்றத்தில் இளம் ஜோடிகளை மட்டுமல்ல நம்மையும் நெகிழ வைத்துவிடுகிறார். தனக்குண்டான அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்தவரை பிறருக்கு உதவியாயிருக்க முயலுங்கள் என்பதே சிறையின் ஆன்மா. ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளனை சிறை பிடித்து அமர வைத்ததில் கதாசிரியர் தமிழும் இயக்குனர் சுரேஷும் வெற்றி பெறுகின்றனர்
#சிறை #siraimovie #VikramPrabhu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக