ப்ரியங்கா மோகன் நடிப்பில், கார்த்திக் (நித்தம் ஒரு வானம் இயக்குனர்) இயக்கத்தில் வெளிவந்துள்ள நெட்ப்லிக்ஸ் திரைப்படம் என்ன ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நல்ல ஃபேமிலி மூவி.
சில்லறையை கீழே போட்டு பொறுக்கச் சொல்லாமல் குடும்பத்துடன் கூடிப் பார்க்கலாம். துளி கவர்ச்சி இல்லை. நல்ல இசை. இன்னும் அந்தத் தீம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் VTV சாயல். கொரியா காட்சிகள் அற்புதம். அழகான கொரியாவை மேலும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். நேர்மறை கொரிய கதாபாத்திரங்களின் வடிப்பு. என்ன நெகட்டிவ்? காதலன் கதாபாத்திரம் குழப்பம். எதற்காக விட்டுச் செல்கிறான் என்பதில் தெளிவில்லை. அதுபோல் இறுதிக்காட்சியில் மன்னிப்பு கேட்பதிலும் உயிரில்லை.
அதுபோல், கிராமத்தில் இருக்கும் அம்மாவை விட்டுட்விட்டு எங்கோ கொரியாவில் இருக்கும் வயதான பெண்மணியிடம் உருகுவது நெருடல். அதுபோல், கொரியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, செண்பகம், தான் சிறு வேலைகள் மூலம் சம்பாதித்த காசை கொடுத்து உதவுவது என்பது போங்கு. கொரியாவின் கலாச்சாரம், உணவு, கொண்டாட்டங்கள் போன்றவற்றை இன்னும் அதிகமாகக் காட்சிபடுத்தியிருக்கலாம். நல்ல வாய்ப்பிருந்தும் இயக்குனர் தவறவிட்ட ஒரு கோல்டன் சான்ஸ். படம் மேலும் மெருகேறியிருக்கும். இவையெல்லாம் சிறு சிறு குறைகள் தான். பெரும் பட்ஜெட்டில் pan India மூவி என்று தற்போது கொட்டப்படும் கழிசடை படங்களுக்கு இது ஆயிரம் மடங்கு மேல். தாராளமாய் Indo-kimchi பிரைட் ரைஸ் சாப்பிட்டு வரலாம்.
கொசுறு செய்தி : படத்தின் இறுதி காட்சி வரை, கதாநாயகி ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா என்று தான் நினைத்திருந்தேன். #madeinkorea #Priyankamohan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக