அலைபாயுதே, கண்டுகொண்டேன், சில்லுனு ஒரு காதல், மின்னலே, காக்க காக்க, பையா, ஹே ராம், பிதாமகன் போன்ற படங்களின் அனைத்து பாடல்களையும் அவை வெளிவந்த நேரத்தில் இசைதட்டு மூலமாகவோ அல்லது பதிவிறக்கம் செய்தோ மீண்டும் மீண்டும் ரசித்து கேட்டது ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது வரும் சினிமாக்களில் இதுபோன்ற ரசித்து கேட்கக்கூடிய பாடல்கள் அத்திபூத்தாற் போல் தான் வருகின்றன. சமீபத்தில் ரசித்த பாடல் என்று ஏதேனும் நீங்கள் என்னிடம் கேட்டால் பதிலில்லை. அல்லது மிகவும் வருந்தி யோசித்து ஒரு பாடலை கூற வேண்டிதிருக்கிறது.
நீங்களும் யோசித்து பாருங்களேன். தற்போது வெளிவரும் பாடல்கள் ரசனை இல்லாமல் அமைக்கப்படுகிறதா என்று யோசித்தால் அதுவும் இல்லை. ஜென் z கிட்ஸ்கள் அதை கேட்கவும் முனுமுனுக்கவும் செய்கிறார்கள். வயதாகிவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது மாற்றத்தை சுவீகரிக்க என் மனது தடுமாறலாம். ஒரு வேளை, தோளில் எந்த பாரமும் இல்லாது பாடல்களை கேட்டதினால் தான் அப்பொழுது ரசிக்க முடிந்ததா? என்றால் பிறக்கும் முன் இசையமைத்த ராஜாவின் பாடல்கள் ஒரு தெரப்பியாகவே இருப்பது இன்னும் அதிசயம்.
#Ilayaraja #arrahman #yuvanshankarraja

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக