புதன், மே 01, 2013

ஜான்ஸ் ஸ்கூல் - பெண்கள்

காலை தினமும் நடைபயிற்சி முடித்து அந்த வழியாக வருவதுதான் வழக்கம். வரும் வழியில் இருக்கும் தேவாலயத்தில் ஆறு மணிக்கு மணி அடித்து ஏசுவின் பாடலை ஒலிப்பார்கள். பல முறை கேட்ட ராகம் போல் தோன்றினாலும், அவசரகதியில் ஒரு முறையேனும் நின்று கேட்டதில்லை. இன்றும் அதுபோல் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே என்று தோன்றவே, அருகில் சென்றுதான் கேட்டு பார்க்கலாமே என்று யத்தனித்தென். காதில் ஒலித்த அந்த பாடல்,

'தேன் இனிமைய...ிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே'

நினைவு கொசுவர்த்தி சுருளாக சுருள, காலச்சக்கரத்தில் ஒரு பத்து வருடம் பின்னோக்கி சென்றது. தூய யோவான் மேனிலைப்பள்ளி. ஏழு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளி. அந்த ஆறு வருடங்களும், காலை ஒன்பதிற்கு அடிக்கும் மணிக்கு பிறகு, வகுப்பின் மூலையில் சதுரமாக தொங்கிகொண்டிருக்கும் ஒலிபெருக்கியை பார்த்துக்கொண்டே அதில் இருந்து ஒலிக்கும் பிரேயர் பாடல்களை கேட்டும், பாடியும், மற்றவன் பாடுகிறானா என்று ஓரக்கண்ணில் பார்த்தும் கழித்த பொன்னான நாட்கள். பரந்து விரிந்த அந்த பள்ளியின் (சுமார் 80000 சதுர அடி) எந்த மூலையில் யார் சென்று கொண்டிருந்தாலும் சரி, ஒன்பது மணி பிரேயர் பாடல் ஒலிக்கும்போது அந்தந்த இடத்தில் அங்கேயே நின்று இறைவனுக்கு நன்றி கூறி பிரார்தித்து பின் நகரும் ஒழுக்கத்தை கற்று கொடுத்த பள்ளி. சிறு துளி பேரு வெள்ளமாக, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல், அங்கு கற்று கொண்ட ஒழுக்கம் இன்று வரையில் அலுவலக வேலை முதற்கொண்டு தனி மனித வாழ்விலும் பலருக்கு உதவியிருக்கும் என்பது திண்ணம்.

'தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
தந்தானைத் துதிப்போமே

என்ற அடுத்த பாடல் ஒழிக்க ஆரம்பித்திருந்தது.கள்ளனை துரத்தும் நாய் போல் உருண்டோடி, வேர்த்து விறுவிறுத்து, தொட்டியில் கழனியை குடிக்கும் மாடு போன்று சோறு தின்று, குதிரை போல் ரயிலிலும் பேருந்திலும் நின்றுகொண்டே தூங்கி கழிக்கும் தேமே என்ற வாழ்கையில், அவ்வப்போது இது போன்று பால்யத்தை நினைவுபடுத்தும் சங்கதிகள், படித்தோம் படுத்தோம் என்று டெட்லைன் போன்று பரபரப்பு இல்லா, மீளா வாழ்கைக்கு திரும்ப துடிக்கிறது என்பதை மறுதலிக்க இயலாது



கல்லூரி தினங்களில் நண்பர்களோடு கதைத்து கொண்டிருக்கும்பொழுது அடிக்கடி இந்த ஸ்டேட்மெண்ட் யார் வாயிலிருந்தாவது தவறாமல் வந்துவிடும். 


‘மச்சா இந்த பொண்ணுங்க ஃபிரண்ட்ஷிப் பாத்திருக்கியா? எல்லாம் மேலோட்டமாதான் இருக்கும். கல்யாணம் வரைக்கும் தான். அதுக்கப்புறம் ஒருத்தியாவது டச்ல இருக்காளுங்களா? சுத்தமா இருக்காது ஆனா பசங்க அப்டியில்ல. கடைசி வரைக்கும் அவன் டச்லேயேதான் இருப்பான்’

நிதர்சனமான பொய்!!!

பார்த்த...ு பழகிய வரைக்கும் இந்த கூற்றை ஓரளவு நான் ஒத்துக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய நட்பு நுனிப்புல் மேய்ச்சல் அளவுக்குத்தான் என்பது ஈகோயிஸ்ட் ஆண்களின் தவறை மூடி மறைப்பதற்காக கண்டுபிடிக்கபட்ட கூற்று என்று ஒருவாறு அனுமானிக்க முடிக்கிறது

ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள் என்ற ஆலமரம் போல் பரந்து விரிந்திருக்கும் குடும்பங்கள் கூட திருமணத்திற்கு பிறகு அறுத்தெரியப்பட்ட நாற்றாகவே அறியப்படுகின்றன. காற்றின் வேகத்தில் சுதந்திரமாக மேலே பறக்கும் பட்டத்தை அங்குமிங்கும் சுண்டி அலையவிட்டு வேடிக்கை பார்த்து பின் நூலை மெதுவாக சுற்றி பட்டத்தை கைக்குள் அடக்குவது போல், திருமணமான முதல் நாள் முதலே, ‘நீ இந்த குடும்பத்தின் அடையாளம், கெக்கே பெக்கே என்று நாலு பேர் முன்னாடி சிரிக்காதே என்று ஒவ்வொரு நாளும் ஒரோர் நிபந்தனைகள் விதிக்கபட்டு, உறவினர் வட்டம் முதல் நட்பு வட்டம் வரை நாளுக்கு நாள் சுருக்கபடுகிறது.

பத்து மாதம் சுமந்து பெற்றவளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு மனைவியின் இனிஷியலை தருவித்திருக்கிறார்கள்???

திருமணம் முடிந்து தனக்கும் தன் பிறந்த வீட்டுக்கும் எச்ச சொச்சமாக அறியப்படும் உறவாக இருக்கும் தந்தையின் இனிஷியலை கூட எத்தனை பெண்கள் மறந்து கணவனின் இனிஷியலை சேர்த்துக்கொள்ள வைக்கபடுகிறார்கள்???? (பிரியத்துடன் சேர்க்கபட்டவை தவிர்த்து)

திருமணத்திற்கு பின் புகுந்த வீடு மட்டுமே உன் வீடு என்று சொல்லும், கணவர்களே, உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தால் இதையே சொல்லி வளர்க்கும் தைரியமிருக்கிறதா?

ஒரு பெண்ணிற்கு அவள் அக்காவும் தங்கையும், கடைசி வரை அக்காவாகவும் தங்கையாகவும் தான் தெரிகிறார்கள். ஆனால் கணவன் மற்றும் அவன் வீட்டாரின் வரட்டு கவுரவத்தின் முன் அவள் பாத்திரமும் காட்சிகளும் மாற்றப்படுகின்றன. lமாமனார், மாமியார், ஓரகத்தி, நாத்தனார், அண்டை அயலார், பிறந்த வீடு, இருபத்து நாலு மணி நேரமும் துணை தேடும் குழந்தை, இதோடு கணவனையும் சேர்த்து அவள் வெற்றிகரமாக சமாளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் சமூகத்திற்கு தெரியாமலில்லை, அவள் நட்பு வட்டம் ஏன் சுருங்கியது என்று?

நட்போ, சுற்றமோ எதுவாகினும் உறவில் பலவீனபட்டவள் அல்ல பெண். உறவை பலபடுத்த வந்தவளே பெண். குடும்பத்தின் மகிழ்ச்சியை ஆக்கும் அழிக்கும் ஒரே சக்தி பெண்.

குட்டி சுட்டிஸ்

பரிசுத்ததை தேடும்பொழுது மனசு சொல்லும் ஜோய் ஆலுக்காஸ்.

இல்லை. எனக்கு என் குழந்தை தான் தெரிகிறது.

அன்று நண்பகல், தட்டில் சாதத்தை போட்டு பாப்பாவிடம் நீட்டினேன்.

‘ஐ’ என்று வாங்கி கொண்டது.

‘என்னது இது?’ கேட்டது.

... ‘ரசம் புவ்வா பாப்பா, நல்லாருக்கும். சாப்பிடு. என்றேன்.

‘ரசம் புவ்வாவாஆஆஆஆஆ?’ இழுத்து கேட்டாள்.

‘ஆமா சாப்பிடு’

தட்டை கைய்யில் வாங்கி கொண்டு, அழகாக கால் நீட்டி அமர்ந்து மடியில் வைத்து கொண்டது. ஒரு கை சாதம் எடுத்து வாயில் போட்டாள். முகத்தில் ஏதும் மாறுதல் தெரியவில்லை. மென்று முழுங்கினாள். இரண்டாவது கை எடுத்து மீண்டும் வாயில் வைத்து மென்று கொண்டிருந்தாள்.

ஊரில் உள்ள அனைத்து தெய்வத்தையும் நினைத்து கொண்டிருந்தேன். எப்படியாவது இந்த தட்டு சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டாள் என்றால்.....

நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஆரம்பித்துவிட்டாள். இரண்டு கையும் தட்டில் இருந்தது.

‘பாப்பா, ஒரு கைல சாப்பிடுமா.’

ம்ஹூம். இரண்டு கையையும் வைத்து சப்பாத்தி மாவு பிசைவது போல சாதத்தை பிசைய ஆரம்பித்துவிட்டாள். இன்று கோபப்படக்கூடாது.

‘பாப்பா கைய்ய எடு. தட்ட கொடு. நான் ஊட்டி விடுறேன்.’

'வேணாம்ம்ம். குடு. நானே ச்சாபிடுறேன்’ என்றது.

மீண்டும் கையை வைத்து பிசைந்து இரண்டு கைகளில் சாதத்தை அள்ளி வாயில் வைத்தாள். அப்பாடா என்று நினைக்கும்போது, அவ்வளவு சாதத்தையும் ‘வே’ என்று துப்பினாள். லேசாக கோவம் எட்டிபார்த்தது.

‘பாப்பா, சாபிடுமா. துப்பக்கூடாது.’

‘ச்சரி, நல்லாருக்கும்ம்ம்’ என்றவள் இரு கைகளிலும் சாதத்தை அள்ளி தலையில் கொஞ்சம் முகத்தில் கொஞ்சம் கை கால்களில் கொஞ்சம் என்று தடவிக்கொண்டு என்னை பார்த்து கண்ணை மூடி சிரித்தாள். பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.

‘பாப்பா, இப்போ, சாப்டுறியா இல்லையா’

‘ம், ச்சாபிடுறேன்’ என்றவள், இரு கைகளிலும் சாதத்தை எடுத்து ரெக்கையடித்து பறக்கும் பறவை போல இரு பக்கமும் உதறி தூவ ஆரம்பித்தாள். உட்கார்ந்திருந்த இடமெல்லாம் சாதமாக கொட்டி, கோவம் தலைக்கேறியது.

‘நீ என்கிட்ட அடி வாங்கப்போற. ஒழுங்கா சாப்பிடபோறியா இல்லையா?.’

ஒருமுறை என்னை பார்த்துவிட்டு, கையில் கொஞ்சம் சாதத்தை எடுத்து, ஷெல்பிலிருந்த டெட்டி பியர் வாயில் கொஞ்சம் ஊட்டினாள். இன்னும் கொஞ்சம் எடுத்து அருகிலிருந்த நீளமான நாய்குட்டி பொம்மைக்கு கொஞ்சம், அப்புறம் அவளது சின்ன வயது சட்டையை போட்டிருந்த மிஸ் வேர்ல்ட் பொம்மைக்கு கொஞ்சம் என ஊட்டிவிட்டு, என்னருகில் வந்து, ‘நீ ச்சாப்பிடு, ரசம் புவ்வா நல்லாருக்க்க்க்க்கும்ம்ம்ம்’ என்று தலையை ஆட்டி ஆட்டி சொன்னபோது. தலைக்கேறிய கோபம் முழுவதும் மறைந்து உதட்டோரம் பூத்த சிறு புன்னகையையும், கண்ணில் துளிர்த்த நீரையும் தவிர்க்க முடியாமல் கட்டிக்கொண்டேன்.

பரிசுத்தமான அன்பும், அரவணைப்பும் மட்டுமே நிரம்பியது குழந்தைகளின் உலகம் போல. நாம் தான் அடிக்கடி மறந்துவிடுகிறோம், குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை.

Purity at the utmost form

2115Like · 

ஜூட்டா, கண்டுபிடிக்கவா என்று சுவரோரம்
கண்ணை பொத்தி கண்ணாமூச்சி விளையாடும்
என் இரு வயது மகளை
விளையாட்டாக அடித்து வைக்க
'ஏம்ப்பா அடீக்றிங்க?' என்று
தலையை சாய்த்து உதட்டை சுழித்து கையை நீட்டி கேட்கும்
மழலை கேள்வியை நினைக்கும்பொழுது
என்னையறியாமல் உதட்டோரம் பூக்கும்
புன்னகையில் கழிகிறது
அந்த வாரம்.

முத்து நகர் எக்ஸ்ப்ரஸ்

கடந்த வாரம்
முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது.

மாம்பலம் தாண்டி சில நிமிடங்களில் டி‌டி‌ஆர் வந்தார், வயது ஐம்பது மதிப்பிடலாம். ஒவ்வொரு டிக்கட்டாக பொறுமையாக சோதனை செய்தார். அருகிலிருந்தவர் தான் கொண்டு வந்திருந்த டிக்கட்டை காமித்து மூன்று பேர் வரவில்லை என்றார்.

‘ஓ, நான் இந்த டிக்கட்ல வேணா Not Travelled னு எழுதித்தரேன். நீங்க போய்ட்டு இந்த டிக்கட் காமிச்சு காசு திரும்ப வாங்கிக்கலாம்.’ ...என்றார்.

பக்கத்திலிருந்தவருக்கு வாயெல்லாம் பல்லாக தெரிந்தது.

‘நல்லது சார். நான் கூட பணம் வேஸ்டாச்சேனு வருத்தபட்டேன். Last minute cancellation. அதான்.

‘நோ ப்ராப்ளம். நீங்க கிளைம் பண்ணிக்குங்க.’ என்றார்.

இவ்வளவு பொறுமையாய் ஒரு டி‌டி‌ஆர் பேசி பார்த்ததில்லை.

அடுத்து என்னுடைய டிக்கட்டை காட்டினேன்.

‘சார், ‘excess fare’ கட்டணும்’. என்றார்

‘Fare Revision’ முன்பே டிக்கட் புக் செய்திருந்ததினால், வித்தியாசத்தொகையை ‘excess fare’ ஆக, ரயிலில் டி‌டிஆரிடமே கட்டலாம்.

தன் பாக்கெட்டில் கை விட்டு ரசீது புக்கை எடுத்து, PNR நம்பர், From, To என எல்லா விவரங்களையும் அதில் பொறுமையாக எழுதி கையில் குடுத்தார். முப்பது ரூபாய்கே ரசீது எழுதிருந்தார். வழக்கமாக முப்பத்தெட்டு ‘excess fare’ வரும்.

‘சார். முப்பதெட்டு ரூபானு நினைக்கிறேன். செக் பண்ணுங்க’ என்றேன்.

குனிந்து செக் பண்ணியபிறகு, ‘ஆமா தம்பி. கரெக்டு தான். முப்பதெட்டு ரூபானு போட்டுருக்கு. சரியா தெரியல. என்றார்.

மீண்டும் ரசீது புக்கை எடுத்து PNR வகையறாவை எழுத ஆரம்பித்தார்.

‘சார். அதே ரசீதுல முப்பத, முப்பத்தெட்டுனு மாத்திடலாமே.’ என்றேன்.

உடனே பதட்டபட்டவர், ‘அது கூடாது தம்பி, Govt விஷயம். Audit ப்ராப்ளம் வரும். இதெல்லாம் நாம கரெக்டா இருக்கனும்.’ சொல்லிவிட்டு ஒரு இரண்டு நிமிடம் பொறுமையாக எழுதி, எட்டு ரூபாய்க்கான ரசீதை என்னிடம் குடுத்தார்.

அந்த கேப்பில் அருகிலிருந்தவர், டி‌டி‌ஆர் ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்குறாரே’ என்று என காதை கடித்தார். ஒன்றும் சொல்லாமல் திரும்பினேன்.

பர்ஸில் சில்லரை இல்லாததால், நூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்டினேன்.

‘அய்யோ. இப்பதான் தம்பி, கலெக்ஷன் ஆரம்பிச்சேன். சில்லரை இல்லை. ரசீதுல வேணா எழுதி தரேன் என்று நூறு ரூபாயை வாங்கியவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மீண்டும் நூறு ரூபாயை என் கையிலே கொடுத்து விட்டு ‘வேணாம் தம்பி, நீங்களே சில்லரை மாதி கொடுங்க’ என்றார்.’

‘சார், ரசீத வேற குடுத்துட்டீங்க, வேணாம் நீங்களே வச்சுக்குங்க. சில்லரை கலெக்டானதும் குடுங்க என்றேன்.

‘அய்யோ, உங்க கிட்ட வாங்கிட்டு நாம்பாட்டுக்கு மறந்துட்டேனா கஷ்டம். நீங்க கொடுக்க மறந்தா கூட என் பாக்கெட்லேந்து எடுத்து கட்டிப்பேன். உங்க எக்ஸ்ட்ரா காசு நான் மறந்து எடுத்துட்டு போய்டக்கூடாது.’ என்று சொல்லியவர் அடுத்த கேபினுக்கு போய்விட்டார்.

அந்த ஒரு ஷணத்தில் டி‌டி‌ஆர் எனக்கு காந்தியாய் தெரிந்தார்,

தற்செயலாக வந்த மினரல் பாட்டிலை வாங்கிவிட்டு, சில்லரையை தேற்றினேன்.

கொண்டு போய் அவரிடம் குடுத்தேன். ‘தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு ரசீதை எழுத ஆரம்பித்தார்.,
மீண்டும் வந்து என் இருக்கையில் அமர்ந்தபோது, அருகிலிருந்தவர், ‘அப்பவே சொல்லல. இந்த ஆளு வித்தியசாமா இருக்காருனு, சரியான லூசுனு நினைக்கிறேன். அவர் பாக்கெட்லேந்து போட்டு கட்டுவாராம்.’

ஒரு முறை முறைத்துவிட்டு திரும்பி கொண்டேன்.

இப்போழுதெல்லாம் நேர்மை நியாயமாக நடந்துகொண்டால் லூசாகத்தான் தெரிவோம் போல.

42913769Like ·





கவுண்டர் செந்தில் slang ல் படிக்கவும்

டேய் நாதசு

சொல்லுங்கண்ணே

எனக்கு ஒரு டவுட்டு டா. இந்த ரயில்வேக்காரய்ங்க எல்லாரும் உஜாலா போட்டு சுத்தமாய்ட்டனுங்களா?

ஏன்னே ?

... நேத்து ஊருக்கு போயிருந்தேனா?

போயிருந்தீங்க.

முழுசா கேளுடா ஆம்லெட் வாயா. நேத்தும் ட்ரைன்ல வர்றப்போ ஒரு TTR டா

அண்ணே. இன்னொரு TTR ஆ? வேணாம்னே. ஏற்கனவே நீங்க சொன்ன TTR கதைய கேட்டுட்டு அவனவன் அவருக்கு மானசீகமா கோயிலு கட்டி கும்புடுராய்ங்க . இதுல இன்னொரு TTR கதையா. தமிழ்நாடு தாங்காதுன்னே .

டேய்ய்ய்ய்

வேணாம்னா விடவா போறீங்க. சொல்லுங்கண்ணே.

நேத்தும் 38 ரூவா குடுக்கனும்டா. கைல அம்பது ரூவாதான் இருந்துச்சு. அத குடுத்தேன். அத வாங்கினவரு மீதி இருபது ரூவாய எண்ட குடுத்துட்டு ஒரு எட்டு ரூவா சில்லரை இருக்கானு கேட்டாரு. நான் பர்ச நோண்டி பாத்துட்டு, ஆறு ரூவாதான் சார் இருக்குது. நீங்க பத்து ரூவா வச்சிக்குங்கனு சொன்னேன். அதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுமாடா?

என்னன்னே சொன்னாரு?

ஆங், அப்டி கேளுடா. அந்த ஆறு ரூவா மட்டும் குடுங்க, பரவால்லன்னு சொல்லிட்டருடா. எவ்ளோ சொல்லியும் மனுஷன் கேக்கல.

ரெண்டு ரூவா தானேனு விட்டுட்டாரு. இதுக்கு போயி?

டேய், ட்ரைன்ல ஒரு நூறு பேரு ரெண்டு ரூவா இல்லன்னு சொன்ன என்னடா செய்வாரு.

சரி விடமாட்டிங்க. மேல சொல்லுங்க.

அண்ணன் லேசுபட்ட ஆளாடா. உடனே வெளில எட்டி பாத்தேண். காபி விக்கிறவன் வந்தான். அவன்ட, ஒரு பத்து ரூவாய்க்கு சில்லரை இருக்குமான்னு கேட்டேன்டா. உடனே என்னமோ அவன் அண்ட்ராயர கேட்ட மாதிரி என்ன மேலயும் கீழயும் பாத்தான் பாரு. சரிதான் போடான்னு, ஒரு காபியா வாங்கிட்டு மீதி சில்லரைய தேத்திட்டேன்.

ஆனா நீங்க காபி குடிக்கறது இல்லையேன்னே ?

அங்க தான் அண்ணனோட விஞ்ஞானத்த பாக்கணும். பக்கத்துல இருந்த கோச் அட்டேண்டருட்ட காபிய குடுத்து குடிங்கனு சொல்லிட்டேன். மீதி ரெண்டு ரூவா சில்லரைய TTR ட குடுத்துட்டேன்.

ஆமா இவரு பெரிய காமராஜரு, TTR பெரிய காந்தி.

என்னடா அங்க முனங்கலு .

ஒன்னும் இல்லன்னே. TTR ஒரு கிறுக்கன் மாதிரி சொன்னா, நீங்க கேனைகிறுக்கன் மாதிரி பதிலுக்கு வேலை செஞ்சிட்டு வந்திருக்கீங்கனு எவனாவது ஒருத்தன் கமெண்ட் அடிக்கபோறான்.

டேய் நாதசு. அதாண்டா உலகம். நல்லது பண்ணா கிறுக்கன் தாண்டா சொல்றாய்ங்க

ஆமாண்ணே. அண்ணே. ஒரு சின்ன ரிக்வஸ்டு.

சொல்லுடா கோமுட்டி தலையா.

அடுத்த தடவ ஊருக்கு போனீங்கன்னா, தயவு செஞ்சு 38 ரூவா சில்லரை எடுத்துட்டு போங்கண்ணே. இப்படி சில்லரை எடுத்துட்டு போகாம மொக்க போஸ்டா போட்டு எங்கள சாகடிக்காதிங்கன்னே.

டேய் அட்வைசாடா, போடா போய் பல்லு விளக்குடா நாயே.


125Like ·  ·