நெடு நாள் கழித்து வாசித்த 'நேமிக்கம்' சிறுகதை ஒரு வித பரவசத்தை கடத்தியுள்ளது. தனக்கும் தன் மகனுக்கும் இருக்கும் மொட்டை போடும் நேர்த்திக்கடன் பொருட்டு, சுற்றம் சூழ ஒரு லாரியில் ஏறி சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நோக்கிய ஒரு பயணம் தான் இந்த சிறுகதை.
நேர்கோட்டில் பயணிக்கும் பங்கு தான் இந்த சிறுகதையின் சிறப்பு. பத்திரிக்கை வைக்காமல் அழைப்பதற்காக 'தப்பா எடுத்துக்காதீக' என்பதில் தொடங்கும் கதை போகிற போக்கில் பல கதை மாந்தர்களை உள் வாங்கி ஒரு கிராமத்துத் தெருவில் நடக்கும் உணர்வை நம்மிடம் கடத்திவிடுகிறது. கிடா ஆடுகள், முத்து மாமா, முத்திலியம்மா, நெல் அண்டா முருகன், எட்டயபுர உலகம்மாள் லாரி, இருக்கன்குடி ஆறு, கோவில் ஓவியங்கள், தண்ணி போட்டு பந்தியில் சலம்பும் பங்குகள், தேற்றும் மனைவி மாரி என இவர்களின் ஊடே ஊடாடுவது மாடசாமி மட்டுமல்ல. நாமும் தான். ட்விஸ்ட் எண்டிங் க்ளைமேக்ஸ் வைத்தே ஆகவேண்டும் என்று காலகட்டத்தில் 'சுபம்' என்று கதை முடிந்த பாங்கு அருமை.
வெரைட்டி தேடித்தேடி சலித்த மனது ஒரு விதத்தில் எதிர்பார்ப்பது இதுபோன்ற நேர்கோட்டு பயணத்தைத்தான்.
மனதிற்கு நெருக்கமான ஒரு வாசிப்பு. நன்றி Mahendra Babu
Ananda Vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக