ஜா. தீபா Deepa Janakiraman அவர்களின் 'திரையெல்லாம் செண்பகப்பூ' 21வது அத்தியாயத்தை நெருங்குகிறது.
பெண்களை, அவர்களின் மனதை, உணர்வுகளை தான் கண்ட திரை மொழியின் வழியாக அணுகுவதே இந்தத் தொடர். சினிமாவை துணைக்கு இழுத்துக்கொண்டு எத்தனை பிம்பங்களை பிரதிபலிக்கமுடியும் என்ற கேள்வியை அனாயசமாக வாராவாரம் உடைத்தெறிந்து கொண்டு இருக்கிறார் எழுத்தாளர். அத்தனை உணர்வுகளை, பெண்களின் மொழியை, வலியை தமிழ் சினிமா கையாண்டிருக்கிறது. கொண்டு இருக்கிறது. புரிந்துகொள்ளும் மன நிலை தான் இத்தனை ஆண்டுகள் இல்லை. ஒருவர் தலையில் கொட்டி சொல்ல வேண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு. சந்தோசம், துக்கம், அழுகை, பிரிவு சோகம் எனப் பல உணர்வுகளின் ஊடே மிதக்கும் இந்தத் தொடரின் 19 தாவது அத்தியாயம் அதீத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பெண்களின் மௌனம் அல்லது இறுக்கம். கொட்டுக்காளி, அமரன், மெட்டி, குட்நைட் என்று படங்களின் சாட்சி வழியாக பெண்களின் இறுக்கத்திற்கு பின் இருக்கும் அந்த ஆறாத வடுவை முன்னெடுத்து காட்டியிருக்கிறார்.
பெண்களின் இறுக்கம் அல்லது மௌனம் என்பது இதற்கு மேல் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அடங்கி விட்டாள் என்பதல்ல. சமநிலை தவறிய அறிவிலி கூட்டத்தின் மத்தியில் 'இனியும் நீ என்னைப் புரிந்து கொள்ள இயலாது' என்ற மோன நிலையின் வெளிப்பாடு. சிம்பிளாக சொல்வதென்றால் ஆணாதிக்கத்தை சுண்டுவிரலால் 'சீ அந்தாண்டப் போ' என்பது போல்.
வாழ்த்துக்கள். கல்லுக்குள் ஈரம் சுரக்க இன்னும் பூக்கள் மலரட்டும்.
Ananda Vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக