அலுவலகத்துல வேலை பாக்கிறவர் அவர்.
உயர் அதிகாரி. பெரிய பெரிய மேலாளர். பாக்குறவனே பார்வையாலேயே மிரள வைக்கிற டைப். சொன்னா சொன்னதுதான். கட்டளையே சாசனம் டைப். எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. அப்படி ஒரு டெரர். வேலைலையும் exceeding expectation கேட்டகிரி தான். ஒரு கெத்தா வந்துட்டு போயிட்டு இருந்தார்.
அவரு பைய்யனுக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கழிச்சி தான் தெரிய வந்துச்சு விஷயம். கத்திரிக்காய் முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தான ஆகணும். வந்திருச்சு. இவரும் பெரிய இடம். பொண்ணு எடுத்த இடமும் பெரிய இடம் தான். அதாவது ஸ்டேட்டஸ் மெயின்டெய்ன் பண்ணி எடுத்துட்டாங்க. ஆனா மனுஷத்தன்மையா கொஞ்சம் கூட நடந்துக்கல.
ஒத்தைப் பொண்ணா செல்லமா வளர்ந்த புள்ளைய மகளா பாக்கலைனாலும் கூடப் பரவால்ல. மனுஷியா கூட மதிக்கல. மருமகப்புள்ளைய படாத பாடு படுத்திருக்கு அந்த அம்மா. அதாவது டெரரொட சம்சாரம். சமைக்க வீடு கூட்ட துணி துவைக்க தோட்டம் அப்படி இப்படின்னு எல்லா வேலையும் இது மேல கட்டிருக்கு. இத்தனைக்கும் கவர்ன்மென்ட் குடுக்குற வேலையாள் ரெண்டு பேரு வீட்டுல உண்டு. அவங்க ரெண்டு பேரையும் சும்மா நிக்க வச்சி இந்த பொண்ணை வேலை வாங்கிருக்கு. மதிய வேளைல செருப்பு போடாம மொட்டை மாடிக்கு துணி காய போட சொல்லிருக்கு. எல்லாரும் சாப்டு முடிச்சப்புறம் தான் இந்த பொண்ணு சாப்பிடணும். கீழ உக்காரணும் அது இதுனு ஏகப்பட்ட ரூல்ஸ். கொஞ்ச நாள் பொறுத்த இந்த பொண்ணு அப்புறம் ஃபோன் போட்டு அழுக, அவரு அப்பா உடனே வந்து கூட்டிட்டு போயிட்டார்.
சமரசம் பேச வந்திருக்காங்க. இத்தனைக்கும் அந்த பைய்யன் ஒரு வார்த்தை கூட சப்போர்ட் பண்ணலை. சமரச பஞ்சாயத்துல தான் அந்த பொண்ணு சொல்லிருக்கு அவன் ஒரு ஆம்பளையே இல்லைனு. கழுத்துல கிடந்த தாலியை கைல கழட்டி குடுத்துட்டு 'போ வெளியேனு' விரட்டிடுச்சு.
நம்ம டெரர் ஆசாமி என்ன பண்ணாருனுதான கேக்குறீங்க. அவ்வளவு களேபரம் நடந்தும் ஆளு ஒரு வார்த்தை கூட பேசாம மிக்சர் சாப்டுட்டு இருந்திருக்கார். வீட்டுல அந்த அம்மா நில்லுன்னா நிப்பாராம். உக்காருனா உக்காருவாராம். மொத்தத்துல மாடர்ன் கட்டப்பாவா இருந்திருக்கார். ஆனா வெளில என்னமோ டெரர் ஃபேஸ். தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு.
இப்போ ரிட்டையர் ஆகி போயிட்டார். போனப்புறம் தானே புறம் பேசணும்.
வீட்டில
எலி வெளியில புலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக