புதன், ஏப்ரல் 17, 2024

The Indrani Mukerjea Story: Buried Truth

 


இன்வெஸ்டிகேட்டிவ் டாகுசீரிஸ்ல என்னைக்குமே நெட்பிலிக்ஸ் கிங் தான். அதுமாதிரி சொல்லி அடிச்சிருக்குற ஒரு சீரிஸ் தான் இந்த இந்திராணி ஸ்டோரி.  

ஷீனா போரா அப்புறம் இந்திராணி முகர்ஜி அப்படிங்கற பேர்லாம் நமக்கு 2015ல தெரிஞ்சிருக்கும். 2012லேயே ஷீனா போரா கொல்லப்பட்டாலும் 2015ல தான் அது வெளில தெரிய வருது. அதுவும் யாரால? இந்திராணியோட கார் ட்ரைவரால.  



கேஸ் இதுதான். ஷீனாவ இந்திராணி கொலை பண்ணி எரிச்சிட்டாங்க. முதல்ல ஷீனா இந்திராணியோட சிஸ்டர்னு தெரிய வருது. ஆனா இன்வெஸ்டிகேஷன் போகப்போக ஷீனா இந்திராணியோட பொண்ணு அப்படிங்கற அதிர்ச்சிகரமான உண்மை வெளில வருது. இந்திராணியோட முதல் கணவர் யாரு? அவரு எங்க இருக்காரு? அப்டினு மீடியா துப்பு துலக்கும்போதுதான் இந்திராணிக்கு மொத்தம் மூணு கணவர்கள்ங்கிற உண்மை தெரியுது. அதுல முதல் கணவர் யாருங்குறத மீடியாகாரங்க தான் கண்டு பிடிக்கிறாங்க. அவரு பேரு சித்தார்த். ஆனா இந்திராணி தன்னோட வாக்குமூலத்துல ஷீனா சித்தார்த்தோட பொண்ணு இல்ல. தன்னை சிறு வயசுலேயே தன்னோட அப்பா கற்பழிச்சதாவும் அதுல பிறந்த குழந்தை தான் ஷீனா அப்டினும் சொல்றாங்க. என்ன தலை சுத்துதா?  

இதுக்கேவா? ஷீனா இந்திராணி பொண்ணு. இப்போ ஷீனா ராகுலை காதலிக்கிறாங்க. அந்த ராகுல் யாருன்னா இந்திராணியோட மூணாவது கணவரோட முதல் மனைவிக்கு புறந்த பையன். இன்னும் தலை சுத்துதா?  

சீரிஸ் ரெண்டு பெர்ஸ்பெக்டிவ்ல மூவ் ஆகுது. ஒன்னு இந்திராணி நிரபராதி அப்டினு இந்திராணி மற்றும் அவங்க வக்கீலோட பார்வைல. இன்னொன்னு இந்திராணிதான் கொலை செய்தாங்க அப்டினு போலீஸ் பார்வைல. ரெண்டுமே வெவ்வேறு திசைல போகுது. ஆறு வருஷத்துக்கு அப்புறம் இந்திராணி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மத்த மூணு பேரும் இப்போ பெயில்ல வெளில வந்துட்டாங்க.  

கொலை பண்றதுக்கான மோட்டிவ் இதுதான் அப்டினு தெரிஞ்சப்புறமும் சாட்சிகள் இல்லாத காரணத்தால இன்னும் தீர்ப்பு வழங்கப்படலை. இப்படியும் ஒரு குடும்பம் இருக்க முடியுமா? அதை குடும்பனு சொல்லலாமா? ஆசைகள் மனுஷனை எங்க வரைக்கும் கூட்டிட்டு போகுது? இதுமாதிரி பல கேள்விக்கு விடை இந்த சீரிஸ். இறுதில சட்டம் ஒரு இருட்டறை. 

#IndraniMukherjee

 

கருத்துகள் இல்லை: