புதன், ஏப்ரல் 17, 2024

பொறுக்கலையே

 


'உனக்கென்ன. மூடிட்டு இரு', அப்டினு சொல்றத கேட்ருப்போம். சும்மா இல்லாம அதாவது மனசுக்குள்ள உண்மையா என்ன நினைக்கிறோம் அப்டிங்கறத வயிறு எறிஞ்சிகிட்டு சொல்லி ஊரெல்லாம் வாங்கி கட்றது தேவையா? நுணலும் தன வாயால் கெடும்ன்ற மாதிரி ஆச்சுல்ல. 

விஷயம் இதுதான். டி.எம். கிருஷ்ணாக்கு 2024 வருடத்துக்கான சங்கீத கலாநிதி அவார்ட் கொடுத்ததுக்கு ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் பொங்கிருக்காங்க. இனிமே ம்யூசிக் அகடெமில பாடப்போறது இல்லை அது இதுனு ஏகப்பட்ட புலம்பல். இவங்க லெட்டர் அனுப்புன கையோட, சொல்லப்போனா லெட்டர் அகடெமிக்கு போய் சேர்றதுக்குள்ளேயே சோசியல் மீடியால அதை போஸ்ட் பண்ணி ஒரே ரகளை பண்ணிருக்காப்புல. காரணம் என்ன?. வவுத்தெரிச்சல். 30 வருஷம் கூவுறோம். வர்லேயேனுட்டு. இதுமட்டுமில்லாம, இன்னும் சில பேர், தனக்கு கொடுத்த அவார்டை ரிட்டர்ன் பண்றோம்னு கூச்சல் வேற. குடு. யாருக்கு நஷ்டம்.

 


பெரிய பங்களாவை இல்ல அரண்மனையை பாக்குறீங்க. உள்ள போய் பாக்கணும்னு நாம ஆசைப்படலாம். உள்ள விடுவாங்களா பாக்கலாமா அப்டிங்கற சந்தேகம்லாம் வருது. அப்போ ஒரு ஆளு 'வாய்யா. இவ்ளோதான் இருக்குது. உள்ள வந்து பாத்துட்டு போ. நான் காமிக்கிறேன்' அப்டினு சொன்னா எப்படி இருக்கும்? பங்களாவுக்கு உள்ள இருக்கறவன், அதை சார்ந்து பிழைக்கிறவன் எல்லாரும் இவனை குத்துவாங்களா இல்லையா? அதுதான் நடக்குது இங்க.  

கர்நாடக சங்கீதம் அப்படிங்கறது சமூகத்துல ஒரு சாராருக்கு மட்டுமே கிடையாது, எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க அப்டினு நினைக்கிற ஆளு நம்ம கிருஷ்ணா. நினைக்கிறது மட்டும் இல்லாம கச்சேரியை நடு ரோட்டுல நடத்தி காட்டுனவரு. எல்லா தரப்பட்ட மக்களும் இந்த கர்நாடக சங்கீதத்தை ரசிக்கணும் கத்துக்கணும் அப்படிங்கற ஒரு நோக்கம் அவருக்கு. 

கிருஷ்ணா பெரியாரை புகழ்றாராம். அதான் மெயின் ரீசன் அப்டினு சகோதரிகள் பிராது கொடுத்திருக்காங்க. என்ன ஒரு லாஜிக்கு. எங்க போய் முட்ட. கலாநிதி அவார்ட் சங்கீதத்துக்காக ஒருத்தர் பண்ண பங்களிப்புக்காக கொடுக்கப்படற ஒரு அவார்ட். அவர் சங்கீதத்துல சாதிச்சார இல்லையானு பாத்து விமர்சனம் பண்றதை விட்டுட்டு, அவரோட சித்தாந்தங்களுக்காக வெறுக்குறேன்னு சொன்னா, தவறு யாரு மேல. சுயரூபம் வெளில வந்துருச்சு.

#isupporttmkrishna #TMKrishna #sangeethakalanidhi T.M. Krishna

 

 

கருத்துகள் இல்லை: