1. அப்பத்தா
ப்ரியதர்ஷன் இயக்கம். ஊர்வசி
நடிப்பு. ஊறுகாய் போட்டு
வியாபாரம் செய்து
பிழைப்பை ஒட்டி
கொண்டிருக்கிறார் ஊர்வசி.
ஊறுகாய் என்றுபள்ளியில் கிண்டல் பண்ணுவதினாலேயே அவரது
மகன்
அவரை
வெறுக்கிறான். ஒரு
கட்டத்தில் மேல்
படிப்புக்காக ஊரிலிருந்து கிளம்பியவன் கிளம்பியவன் தான்.
ஆடிக்கொரு முறை
அம்மாவாசைக்கொருமுறை என்று
ஊர்வசியை அழைத்து கடமைக்கு பேசுகிறான். இப்படிப்பட்ட நிலையில் ஊர்வசிக்கு அவனது
மகனிடமிருந்து அழைப்பு வருகிறது. குதூகலமாக ஊருக்கு செல்லும் ஊர்வசிக்கு அங்கு
காத்திருப்பது பேரதிர்ச்சி. பாசத்தினால் அழைத்திருப்பான் என்ற
எண்ணத்தில் மண்
விழுகிறது. சிறுவயதில் இருந்தே பார்த்து பயப்படும் நாயை
பார்த்துக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறாள். மகன்
தனது
குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் அந்த
பதினைந்து நாட்களும் அவள்
நாயை
பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஏமாற்றம் அவளுக்கு மட்டுமில்லை நமக்கும் வருகிறது. முதலில் பயந்து
ஒதுங்கி ஓடினாலும் இரண்டு
மூன்று
நாட்களில் நாயிடம் அன்பு
ஏற்படுகிறது. அவரது
கலகலப்பான பேச்சு,
கரிசனம், ஊறுகாய் ரெசிப்பி என
பல
காரணங்களால் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு நெருக்கமாகிறார். சுற்றுலாவில் இருந்து திரும்பி வரும்
அவரது
மகன்,
நாயுடன் மல்லுக்கட்டி முதல்
நாளில்
கந்தகோலம் ஆகியிருக்கும் அபார்ட்மெண்ட் பார்த்து இவரிடம் கடுமையாக நடந்து
கொள்ள
ஊர்வசி
வருத்தத்துடன் கிராமத்துக்கு திரும்புகிறார்.
கொஞ்சம் சோகமான
கதையாகத் தெரிந்தாலும் படம்
முழுவதும் மெலிதான புன்னகை நமது
உதட்டோரத்தில் தேங்கி
நிற்கிறது. காரணம்
ஊர்வசியின் கலகலப்பான நடிப்பு. நாயுடன் அவர்
மல்லுக்கட்டும் சீன்கள் யதார்தத்துக்கு சற்று
தொலைவில் நின்றாலும் சிரிப்பை வரவழைக்கின்றன. அங்கங்கு சென்டிமென்ட் சீன்
எட்டிப்பார்க்கிறது. கண்ணில் வேர்வை
வரவழைக்க முயற்சித்திருக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் பத்மஸ்ரீ வரைக்கும் சென்று
காதில்
பூ
சுற்றியிருக்கிறார்கள்.
என்றாலும் குடும்பத்துடன் குதூகலமாய் பார்க்க இந்த
அப்பத்தா ஒரு
நல்ல
சாய்ஸ்
தான்.
2. உடன்பால்
பெற்ற
பிள்ளைகள் கடன்
தொல்லை
தாங்காமல் மற்றும் வியாபாரம் செய்வதற்கு தேவைப்படும் முதலீட்டுக்கான பணத்
தேவைக்காக தந்தையின் இறந்த
உடலை
வைத்து
அடிக்கும் கூத்தே
உடன்பால். இறந்த
பிறகு
உறவினர்கள் வந்து
ஊற்றும் பாலிற்கு பெயரே
உடன்பால். சார்லி
தான்
அந்த
தந்தை.
தனது
மகன்
மருமகள் மற்றும் பேரனோடு காமிக்கும் பாசத்தில் நாமே
உருகிவிடுவோம். கலகலப்பாக இருக்கிறார்.
கதையின் கரு
இவ்வளவு சோகமாயிருந்தாலும் அவ்வளவு கல்
நெஞ்சக்காரர்களான வாரிசுகளின் செயல்களை எள்ளி
நகையாடியிருக்கும் ஒரு
வாசிப்பாங்கான படம்
தான்
உடன்பால். மேக்கிங் அருமையாக இருக்கிறது. ஒரு
வீட்ற்குள்ளேயே சுற்றி
சுற்றி
வந்தாலும் அலுப்பு தட்டவில்லை. அத்தனை
பிள்ளைகள் இருந்தும் அவர்களது சுயநல
பண
வெறிக்காக எங்கோ
ஒரு
இடத்தில் நாடு
ரோட்டில் அநாதை
பிணமாக
கிடக்கிறார் சார்லி.
எவ்வளவுக்கெவ்வளவு கலகலப்பாக நடித்தாரோ அந்த
அளவுக்கு இறுதி
காட்சியில் கண்
கலங்க
வைத்து
விடுகிறார். தாராளமாக குடும்பத்துடன் பார்க்கவேண்டிய ஒரு
ப(பா)டம் தான்
உடன்பால்.
3. எறும்பு
மீண்டும் சார்லி.
முதல்
தாரத்திற்கு பிறந்த
இரு
குழந்தைகள்அத பின்பு
மறுமணம் முடித்து ஒரு
சிறு
குழந்தை என
மூன்று
குழந்தை மற்றும் மனைவி
அம்மாவுடன் வாழும்
ஒரு
கடனாளி.
கூலி
விவசாயி. படத்தின் முதல்
காட்சியில் இருந்து ஈர்க்க
துடங்கி விடுகிறார் இயக்குனர். குழந்தைகளை வெறுமனே சாப்பிட ஹோட்டலில் விட்டுள்ளேன் என்று
சார்லி
கூறும்
டயலாக்
சொல்லாமல் சொல்லிவிடுகிறது அவள்
இரண்டாம் தாரம்
என்று.
37500 கடனை
அடைப்பதற்காக பேசாத
பேச்செல்லாம் பேசும்
வட்டிக்காரராக பட்டாபி பாஸ்கர். இரு
குழந்தைகளில் அக்காவாக மோனிகா
மற்றும் தம்பியாக சக்தி.
இருவருமே சிறந்த
தேர்வு.
சொல்லப்போனால் இரண்டு
பேர்
மட்டுமே இந்த
கதையில் பிரதான
கதாப்பாத்திரங்கள். டைட்டில் சாங்
மற்றும் கதையினூடே வரும்
மூன்று
பாடல்களும் ரசிக்கவைக்கின்றன. சித்தி
இல்லாத
நேரத்தில் மோதிரத்தை தன்
மூத்த
பேரனுக்கு போட்டு
அழகு
பார்க்கும் ஆயா,
மோதிரத்தை தொலைத்துவிடும் தம்பி,
தன்
சித்திக்கு விவரம்
தெரிவதற்குள் எப்படியாவது மோதிரத்தை வாங்குவதற்கு காசு
சேர்க்கத் துடிக்கும் அக்கா,
வெள்ளேந்தியான சிட்டு
கேரக்டரில் ஜார்ஜ்
மரியான் என
எல்லோருமே பாசத்தை டன்
கணக்கில் பொழிந்திருக்கின்றனர்.
முயல்
பிடிக்கும் காட்சி,
சிட்டுவின் பொம்மை
போன்,
மல்லாட்டை உரிக்கும் காட்சி,
உண்டியல் திருட்டு, பேபி
மோனிகா
அம்மா
என்று
வெடித்து அழும்
இடம்
என
படம்
முழுவதும் கவிதை
போல
நிறைய
காட்சிகள் ததும்பி வழிகின்றன. பணத்தை
புரட்டுவதிலேயே சார்லியின் வாழ்க்கை நகர்வது ஒரு
சராசரி
விவசாய
கூலியின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. சித்தி
வீட்டிற்கு திரும்ப வருவதற்குள் மோதிரத்தை வாங்கி
விட
வேண்டும் என்கிற
பதைபதைப்பு மாஸ்டர் சக்திக்கு மட்டுமல்ல நமக்கும் தொற்றிக்கொள்கிறது அல்லவா,
அதுதான் இயக்குனர் சுரேஷின் வெற்றி.
அக்கா
தம்பி
பாசம்,
ஆயாவின் அன்பு,
தந்தையின் அனுசரணை, மாற்றாந்தாய் கொடுமை
இதற்கு
நடுவில் இருக்கும் ஒரு
அழகிய
வாழ்க்கை என்று
நம்மை
ரசிக்க
வைத்திருக்கிறது இந்த
எறும்பு.
பெஸ்ட்
பீல்
குட்
மூவி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக