குறைந்தது
எட்டு மணி நேரம், அதிகபட்சம் பன்னிரெண்டு மணி நேரம் என்று நாம் ஒரு வாரத்தில் அலுவலகத்தில்
வேறு வழியின்றி செலவிடும் நேரம் மட்டுமே 40 முதல் 60 மணி நேரங்கள். உறங்குவதற்கு தோராயமாக
7 மணி நேரம் என்று எடுத்துக்கொண்டோமேயானால் 35 மணி நேரம் அதில் செலவிடப்படுகிறது.
ஆக, ஒரு வாரத்தில் 80% நேரம் நாம் வீட்டில் இல்லை.
அல்லது இருந்தாலும் இல்லை என்ற நிலை. மீதம் இருக்கும் 20% நேரம் கூட தம்பதிகள் தங்களுக்குள்
அன்பை பரிமாறிக்கொள்ளும் க்வாலிட்டி டைமா என்றால் கிடையாது. குழந்தைகள், உறவினர் பஞ்சாயத்து, நண்பர்களுடன் அரட்டை, அண்டை அயலாரோடு விதண்டாவாதம், வயதானவர்களின் மருத்துவ
கவனிப்பு என ஒரு ஐந்து சதவீத தனிமையான நேரம் கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படியே
கிடைத்தாலும் கூட, பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பின் அழுத்தம்
காரணமாக, துணையை அலட்சியமாக கையாளும் நிலையே இங்கு மிகுந்து காணப்படுகிறது.
அலுவலகங்களில் இங்கிதம் காரணமாக வெளிமனிதர்களின் மேல் கொப்பளிக்க முடியாத உணர்வுகள்
அனைத்தும் வெடித்து சிதறுமிடமாக உறைவிடம் பரிமாணம் கண்டுவிட்டது.. குளித்து, உணவருந்தி தூங்குவதற்கு மட்டுமே வீடு என சூல்நிழை கைதியாக மாறிவிட்டோம். புரிந்துகொள்ளமுடியாத
இந்த இடைவெளியை நிரப்பும் கானல் நீராக இன்று அலுவலகம் உருமாறியிருக்கிறது.
நேரத்தையும்
இன்ன பிறவனவற்றையும் விராயமாக்குவதற்கு போக்கிடம் இல்லாத காரணத்தினால் நமக்கு முந்தைய
அதற்கும் முந்தைய தலைமுறைகள் இந்த கள்ளக்காதல் விவகாரத்தில், மனைவிகள் துணைவிகள் என்று
மாட்டிக்கொண்டு விழி பிதுங்கியதை நாம் பார்த்தும் கேட்டுமிருக்கலாம். இவர்களுக்கு இருந்த
மற்றுமொரு சௌகரியம் டெக்னாலஜிகள் அட்வான்ஸ்மெண்ட் இல்லாத காலம் அது என்கிற காரணம் கூட
இருக்கலாம். ஒரே நொடியில் போட்டோ எடுத்து வாட்சப்பில் பரப்பிவிட முடியாது. மூன்றாவது
கண் போன்று CCTV கேமராவோ, நிழல் போலத்தொடரும்
GPS போன்ற சாதனங்களோ கண்டுபிடிக்கபடவில்லை. கொள்ளிவைக்கும் பொழுதுதான்
வண்டவாளம் தெரியும் என்ற அளவுக்கு டபாய்த்துள்ளார்கள்.
இது
இவ்வாறிருக்க, தற்காலச்சூல்நிலையில் இன்ஸ்டா ரீல்ஸ், யூட்ய்ப் ஷார்ட்ஸ், முகநூல், ட்விட்டர் இதுபத்தாதென்றால் சாதி, மதம், சூரியன், தாமிரை, காவி, பச்சை என ‘மைய்யமா’க வம்பள(பிழு)க்க பல விஷயங்கள் விரவிக்கிடந்தாலும் நம்மவர்கள் அதையும் தாண்டி
மாற்றான் தோட்டத்து மல்லிகையிடம் இன்பம் துய்க்க விழைவதை காணும்போது, இது தலைமுறைகள் தாண்டிய மேனுபேக்சரிங்க் டிஃபக்ட் என்றே எண்ணத்தோன்றுகிறது.
விதைப்பைகள் வெடித்துச்சிதரும் அளவுக்கும்
நசுக்கி பிழியும் ஒரு வேலையில் இருந்துகொண்டு இந்த தில்லாலங்கடிகளை அரேங்கேற்றும் இளைஞர்(ஞி)களை
கண்டால் ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் மறுபக்கம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மல்டிடாஸ்கிங்
மச்சான்கள். என்னளவில் தெரிந்த இருவேறு சம்பவங்கள்.
நண்பரா, உடன் வேலை புரிந்தவரா, உறவினரா என்ற கதைக்குள் போக விரும்பவில்லை. 35 வயது.
பார்க்க கருகருவென்று கோலிவுட் பட அடியாள் போல இருப்பார். மனைவி அதற்கு நேர்மாறாக.
கருத்த மச்சான் செய்யாத சேட்டையில்லை. இவர் ‘கை’நீட்டிய இடங்கள் எல்லாமே இவருடன் பள்ளியில் மற்றும் கல்லூரியில் படித்தவர்கள்.
தொடர்பை தூண்டிக்காமல் நீட்டித்திருந்தார். அங்கிருந்து இங்கு ஊருக்கு வரும் வேளையில் பல நர்த்தன
அரேங்கேற்றங்கள் உண்டு. அரசல் புரசலாக தெரிந்து வீட்டில் மனைவி கண்டித்துள்ளார். இல்லை
நான் ‘ஆர் ஈ எம் ஓ’ வாகத்தான் (‘ரெமோ) இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார். ஓரளவுக்கு
மேல் மல்லுக்கட்ட முடியாமல் கண்டும் காணாமல் விடவும் வெள்ளம் கரை புரண்டுவிட்டது. உடன்
வேலை பார்க்கும் கைம்பெண் ஒருவரிடம் வலை விரித்து, ‘விரித்த’ அதே வலையில் தானும் சிக்கிக்கொண்டார். நோட்டீஸ்
ஒட்டாத குறையாக அலுவலகம், குடும்பம் என எல்லோருக்கும் தெரிந்து
இப்போது அது விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இவரது ‘இந்திரிய’ பசிக்கு ஒரு இளம்பெண்ணும் அவர்களது மூன்று வயது பெண் குழந்தை தன்னுடைய இயல்பான
வாழ்க்கையை தொலைத்துவிட்டது.
மற்றுமொரு
சம்பவம். அவரும் 37 வயது ஒத்தவர். இரு குழந்தைகள். இவருடன் வேலை பார்க்கும் சக ஊழியையும்
குடும்பம் குட்டி என்றிருப்பவர். வேலை காரணமாக பேச ஆரம்பித்து கிட்டதட்ட நாள் முழுவதும்
போனிலே கழிக்கும் அளவுக்கு நாய் காதல். இந்த நாய் காதலில் கல்லெறியும் விதமாக இன்னொரு
ஊழியர். அவர் தான் பங்குக்கு ‘லெஃப்ட்’ இண்டிகேட்டர் போட்டு பார்க்க அதற்கும் ஒகே என்று
அந்த ஊழியையிடமிருந்து சிக்னல். இருவரும் கொஞ்சம் இணக்கமாக, இப்போது
முதலாமவருக்கு பொறுக்கவில்லை. மூன்று பேருமே மணமானவர்கள். தங்களுக்கென்று
ஒருகுடும்பம் குட்டியென்று இருப்பவர்கள். அதையும் தாண்டி திருட்டு மாம்பழத்தை ருசிப்பதில்
ஒரு கிளுகிளுப்பு. முதலாமவர் பொறுக்காமல் செய்த விஷயம் தான் ஹைலைட்டே. ஒரு வாரம் பொறுத்து
பார்த்திருக்கிறார். இவரது வழிக்கு அவர்கள் வரவில்லையென்றதும் நேராக மேலாளரிடம் புகார்
தெரிவித்திருக்கிறார். அதுவும் எப்படியென்றால், “சார், இன்னொருவருடைய மனைவி என்னிடம் இவ்வளவு நாட்களாக
பேசிக்கொண்டிருந்தார். இப்பொழுது வேறு ஒருவர் இடையில் புகுந்து கொண்டதால் அவர் என்னிடம் சரிவர
பேசவில்லை. நீங்கள் தான் அந்த இரண்டாமவரை கூப்பிட்டு கண்டிக்க வேண்டும். அவர் மீண்டும்
என்னிடம் பேச வேண்டும்” என்று முறையிட்டிருக்கிறார். அந்த மாத டார்கெட்டை முடியென்றால்
இவனுக்கு இது ஒன்று தான் குறைச்சலா என்று கடுப்பானாரோ என்னமோ, “போய், சர்ஜிக்கள் கிரேட் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் டங் கிளீனர்
வாங்கிக்கொள்” என்று அனுப்பிவிட்டார்.
அலுவல் தொடர்பாக பேசுவது தவறில்லை தான். ஊடே அன்றன்றைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல் தவிர்க்கமுடியாதுதான். ஆனால் அந்த உறவை தனித்தெடுத்து வளர்க்க விரும்புவதும் மேலும் சுகதுக்கங்கள் போன்ற உணர்ச்சிகளை குழுவாக இல்லாமல் தனித்து பகிரும்பொழுதுதான் அந்த உறவு வேறு ஒரு களஅளவை எட்டுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விழுவது புதை குழி என்று தெரிந்தே விழுவது போல். அலுவலக உறவுகளை இருமுனை கொண்ட கத்தியை போல் லாவகமாக கையாள வேண்டியது முக்கியம். திருமண உறவுகள் என்றுமே கண்ணாடி போன்று. விரிசலை ஓட்ட முயன்றாலும் விரிசல் தெரிந்துகொண்டேதானிருக்கும். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தோமேயானால் உண்மையான உறவுகளை இழந்து தவிக்க வேண்டியதுதான்.
தீதும்
நன்றும் பிறர் தர வாரா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக