இந்தியாவிற்குள் 1960 முதல் பரவலாக மோட்டார் ஸ்கூட்டர் உபயோகப்படுத்தபடுகிறது. பரவலாக என்றால் இப்பொழுது இருப்பது போல் வீட்டிற்கு ஒன்று கணக்கில் கிடையாது. கிட்டத்தட்ட 60 வருடங்கள் கழித்து டூ வீலரே இல்லாமல் முடியாது என்ற அளவில் வளர்ந்துவிட்டோம். தோராயமாக 35 கோடி தனியார் வண்டிகள் (இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்) சாலைகளில் ஓடுகின்றன. மத்திய மாநில அரசு வாகனங்கள் தனி. இத்தனை கோடி வாகனங்களில் இருந்து வெளிப்படும் கார்பன் உமிழ்வை கணக்கில் கொண்டால் அதிர்ச்சி அளிக்கக்கூடிய எண்களாக இருக்கிறது. இப்பொழுது இந்த தருணத்தில் நாம் இதை கட்டுப்படுத்தவிட்டால், நமது வருங்கால சந்ததிகளுக்கு வாழத்ததகுதியற்ற ஒரு புவியை விட்டுச்சென்ற துரோகத்தை இழைத்தவர்களாகி விடுவோம்.
இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வாகனங்களின் மூலம் வெளிப்படும் கார்பன் உமிழ்வுகளை இவை பெருமளவில் கட்டுப்படுத்தும் என்றாலும், இந்த வாகனங்களுக்கான மின்சாரதத்தேவைக்கான உற்பத்தியை ஏதன் மூல நிறைவேற்றப்போகிறோம் என்பது முக்கிய கேள்வியாகிறது. மீண்டும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் தான் என்றால், இந்த மாற்றத்திற்கான அர்த்தமே தகுதியிழந்து விடுகிறது. மேலும் இந்த பேட்டரி குப்பைகளை எவ்வாறு கையாளப்போகிறோம் அல்லது மதுசுழற்சி செய்யப்போகிறோம் என்பது முக்கியம்.
இது ஒரு புறமெனில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சூடு பிடிக்க தடையாய் இருப்பதாக நான் கணிக்கும் காரணங்கள்.
1. பெட்ரோல் நிரப்புவது போல ஓரிரு நிமிடங்களில் வண்டியை ரீசார்ஜ் செய்யமுடியாது,
2. தற்போதைய அதிகபட்ச EV mileage என்று கருதப்படுவது 450 KM தான். இதுவே பரீட்சார்த்த முறையில் தான் இருக்கிறது. ஆதலால் 500, 600 KM தாண்டி ஊருக்கு செல்வது என்பது அத்தனை எளிதல்ல. குறைந்தபட்சம் சில வருடங்களுக்கு.
3. அது போலவே, பெட்ரோல் போட்டுவிட்டு இரண்டு மாதம் கழித்து கூட வண்டியை ஓட்டலாம். அனால் EV யில் அதுபோன்று வாய்ப்பில்லை. ஸ்டாண்ட் பை டைம் என்று ஒன்று இருக்கிறது. மொபைல் சார்ஜ் போல. இறங்கி கொண்டே இருக்கும்.
4. பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்ஸ் இல்லை. 30 நிமிடத்தில் 50% கெபாசிட்டி சார்ஜ் பண்ண வேண்டுமென்றால் அதற்கென ப்ரத்யேகமாக நிறுவப்பட்டிருக்கும் அந்த காருக்கான ஷோரூம் செல்லவேண்டும். வீட்டில் முழுமையாக சார்ஜ் செய்வதற்கு குறைந்தபட்சம் 15 மணி நேரம் பிடிக்கும்.
ஆக, குறைந்த நேரத்தில் முழு சார்ஜ் மற்றும் நீண்ட நேர ஸ்டென்ட் பை என ஒரு டெக்நாலஜி தேவைப்படுகிறது. இதை தற்போது R&D செய்து கண்டுபிடித்திருப்பார்கள். அனால் பேடென்ட் செய்வதில் தகராறு நடந்து கொண்டிருக்கும். யார் அதிகம் சம்பாதிப்பது என்று?
www.copyright.gov.in இல் சென்று சில கீவ்ர்டு மூலம் எந்த பேட்டரி கம்பெனி இதை காப்பிரைட் செய்வதற்கு முயற்சித்திருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கி வைத்து கொண்டால், ஐந்தாறு வருடங்களில் பலமடங்கு லாபம் பார்க்கலாம்.
ஆனால் அப்படியே அந்த டெக்நாலஜியை இவர்கள் கண்டுபிடித்தாலும், காப்பிரைட் செய்வதற்கு இந்தியாவில் முயற்சி செய்ய மாட்டார்கள் என்று அனுமானிக்கிறேன்.
எது எப்படியோ, எலெக்ட்ரிக் வாகனங்களின் மின்சக்தி தேவைக்கான உற்பத்தியை தன்னிறைவு செய்வதில் மிகப்பெரிய போராட்டத்தை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். வெகு விரைவில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக