அப்பொழுது அந்த கட்டிடத்தில் இருந்து வந்த சப்தம் அவரை அங்கு ஒரு நிமிடம்
நிற்க செய்தது.
இரண்டு மணிநேரத்திற்கு முன்பு,
வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நேரத்தில், நரசிம்மனுக்கு அந்த பைலை பார்த்தது முதல் எரிச்சலாக இருந்தது.
அதை கொண்டு வைத்த பியூனிடம் கடுகடுத்தார். இன்று மூல நட்சத்திரம், சாயுங்காலம் ஆஞ்சநேயர் கோவில் போக வேண்டும், அர்ச்சனை
செய்ய வேண்டும் என்பதிலேயே பரபரவென்று பரத்திக்கொண்டிருந்தார். அரசாங்க கருவூலத்தில் காசை எண்ணி சரிபார்த்து ஒவ்வொரு நாளும் கணக்கை வரவு
செலவு வாரியாக துல்லியமாக முடித்துவைத்து விட்டு வரும் காசாளர் அவர். “ராம” நாம ஜபத்தை கிடைத்த நேரம் முழுவதும் ஜெபிக்கும் ஆசாமி. யார்
வம்புக்கும் போகாதவர். அதே நேரத்தில் ராமன் ஆண்டால் என்ன் ராவணன் ஆண்டால் என்ன
என்று தன் காரியத்தில் மட்டுமே குறியாக இருப்பவர்.
சார், இந்த
பைல இன்னைக்கு தள்ளி விட்டுடுங்கோ என்று பியூன் கெஞ்சாத குறை.
“அதெல்லாம் முடியாதுடா அம்பி. மணி இப்போவே ஆறு. நாழியாய்டுத்து. கோயிலுக்கு
போனும். பெருமாள சேவிக்கணும். எல்லாம் நாளைக்கு பாக்கலாம்டா” என்று வேஷ்டியில்
படிந்த மண்ணை தட்டிவிட்டு கிளம்பிவிட்டார்
பைக் பஞ்சர், பஸ்ஸில்
கூட்டத்தில் முண்டியடித்தது, கண்டக்டர் சில்லரை தராதது என்று
கோவிலுக்குள் செல்லும் வரை நொந்துகொண்டே இருந்தார். சரியாக
அர்ச்சனை சமயத்துக்கு வந்துவிட்டது அவரை சிறிதேனும் ஆசுவாசுபடுத்தியது. பேரெல்லாம்
கூறி அர்ச்சனை செய்து தீபாராதனை பார்த்து, காணிக்கை வைத்து, கண்ணில் ஒற்றி, துளசி தீர்த்தம் பருகிய பிறகுதான்
பெருமூச்சு விட்டார்.
கோவில் பிரசாதத்தை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார். எரியாத தெருவிளக்கை எண்ணி நொந்துகொண்டே வீட்டை
நோக்கி நடந்தார். பழைய
இருள் சூழ்ந்த பள்ளி கட்டிடத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தார். பசி வயிற்றை கிள்ளியது. ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு படையெடுத்தார்.
அப்பொழுது அந்த கட்டிடத்தில் இருந்து வந்த சப்தம் அவரை அங்கு ஒரு நிமிடம்
நிற்க செய்தது. சில பொருட்கள் கீழே விழுவது போல் கேட்டன. காம்பவுண்ட் சுவரை
ஒட்டிசென்று காதை வைத்தார். ஒரு பெண்ணின் அழுகையோ பேச்சோ தெளிவில்லாமல் கேட்டது.
எவன் எக்கேடு கேட்டுபோனால் எனக்கென்ன என்று நகர ஆரம்பித்தவர் என்ன நினைத்தாரோ
தெரியவில்லை,
பின்னங்கால் பிடரியில் அடிக்க கட்டிடத்திற்குள் ஓடினார். சத்தம் வந்த அறையை நோக்கி
செல்லவும் அங்கு ஒருவன் ஒரு பெண்ணை பலவந்தபடுத்துவது இருட்டில் நிழலாக தெரிந்தது. அவன் குடித்துவிட்டு நிலை கொள்ளாமல்
தள்ளாடிக்கொண்டு அவளை பிடித்து கொண்டிருந்தான். அந்த பெண் ஓட முயன்று
தோற்றுக்ண்டிருந்தாள். எங்கிருந்து வீரம் வந்ததோ தெரியவில்லை. ஓடி சென்று ஒரு
பெரிய கல்லை எடுத்து ராமா ஆஞ்சநேயா என்று கத்திக்கொண்டு அவன் தலையில் ஓங்கி
அடித்தார். அவன் கீழே விழவும், “அப்பா” என்று அழுதுகொண்டே
அவருடைய மகள் அவரை கட்டிக்கொண்டாள்.
Not necessary that it should be your child.
Stop Violence and Save women
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக