இருபது நாட்களுக்கு முன்பு எனது பதின்மூன்று வருட பாரம்பரிய XL Super வண்டிக்கு பெட்ரோல்
போடச்சென்றிருந்தேன். அதன் கொள்ளளவு 4.0 லிட்டர். பல நாட்கள் உபயோகபடுத்தாததால்
வண்டி கிட்டதட்ட ட்ரை ஆகியிருந்தது. பெட்ரோல் போடும் பைப்பை உள்ளே சொருகியவன், கீழே டேங்கை ஆஃப் செய்ய சொன்னான். அது டைவர்சன் டெக்னிக் என்பது பின்பு
தான் தெரிந்தது. கீழே குனிந்து ஆஃப் செய்து தலையை தூக்கிய அந்த அரை நொடியில் நான்
சொன்ன இரண்டு லிட்டர் நிறைந்திருந்தது. என்ன நடந்தது என்பதை என்னால் ஊகிக்க
முடிந்திருந்தது. முன்னாள் சென்ற வண்டிக்கு ஐம்பது ரூபாய்க்கு போட்டவன் அதை
ஜீரோவாக்காமல் அப்படியே போட்டிருந்தான். எனக்கு ஏமாந்த உணர்வு. சந்தேகம் வலுக்கவே
மீண்டும் லைனில் சென்று டேங்கை ஃபுல் செய்யச்சொன்னேன். இப்பொழுது 2.64 லிட்டர்
பிடித்தது. மொத்த கொள்ளளவு 4.0 லிட்டர் தானே. எப்படி நீ 4.64 போட்டாய் என்று
கேட்டதற்கு CB CID யா? ஆளை கூட்டி
வருவாயா என்று மேலும் சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான்.
என் கையில் அப்போது மொபைல் வைத்திருக்கவில்லை. ஒனருக்கு போன் செய்ய முடியாது.
தவிரவும் கைகலப்பு ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆதலால் நீ செய்வது தவறு என்று சுட்டிவிட்டு
மைய்யமாக புனகைத்து விடைபெற்றேன்.
வார்த்தை மோதலின்போது அவனின் பெயரை ஒருவன் உச்சரித்தது ஞாபகம் வந்தது. ஒனரின்
நம்பரை ஆண்டவரிடம் கேட்டு கண்டுபிடித்து அவரிடம் இதை பற்றி விளக்கினேன். வருத்தம்
தெரிவித்து அவனிடம் பேசுவதாக சொன்னார். நேரில் வரச்சொன்னார். ஆனால் அவரிடம் பேசும்
முன்பே India Oil வெப்சைட்டில் நம்பிக்கையில்லாமல் பின் ஊட்டம் அளித்திருந்தேன். மேலும்
முத்தாய்ப்பாக Public Grievance Portal இல் MPANG கேட்டகரியில் ஒரு புகார் அளித்திருந்தேன். அதன்பிறகு தான் ஹைலைட்.
Indian Oil பின்னூட்டத்திற்கு அடுத்த நாளே அவர்கள் பதில்
அனுப்பியிருந்தார்கள். நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவித்து மேலும் அந்த ஊழியனை
மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தனர். மேலும் திருச்சி IOCL
Sales office மேனேஜர் மூன்று முறை போன் செய்து தவறுக்கு வருத்தம்
தெரிவித்தார்.
இதெற்கெல்லாம் மேலாக Public
Grievance Portal இல் பதிவு செய்த புகார் டெல்லி சென்று அங்கிருந்து
IOCL HO க்கு route செய்யப்பட்டு பின்பு அங்கிருந்து சென்னை IOCL மூலம்
திருச்சி IOCL வந்தடைந்து CCTV காமிரா
வரை நிரூபணம் கேட்டு CBCID போல் விசாரித்து ஒரு பதில்
அனுப்பியிருந்தனர். வினை விதைத்தவன் வினை அறுத்துவிட்டான் என்பது புரிந்துவிட்டது.
.
இரண்டு நாட்கள் முன்பு பெட்ரோல் நிரப்புவதற்காக அதே பங்கிற்கு சென்றிருந்தேன்.
கார்ட் தேய்க்கும்பொழுது அங்கிருந்தவரிடம் மெதுவாக விசாரித்தேன். நீங்கதான் புகார்
தெரிவித்தவரா என்று கேட்டு அதற்காகவே காத்திருந்தது போல் அவர் மேனஜரிடம் அழைத்து
சென்றார். அவரும் மன்னிப்பு கேட்டு, அந்த ஊழியனை காசாளரையும்
வேலையில் இருந்து நிறுத்தியதை தெரிவித்தார். அங்கிருந்த அனைவருமே இது போல் ஒரு
தவறு நடக்காது என்பதை உறுதிபடக்கூறினர். தாங்கள் மன்னித்துவிட்டதாக ஒரு கடிதம்
கொடுக்கவேண்டும் என்றும் அதை நான் IOCL ஆபீஸில் ஒப்படைக்க
வேண்டும் என்று வேண்டிகேட்டுக்கொண்டார். முடிந்தால் வீட்டிற்கு வந்தே
வாங்கிக்கொள்கிறேன் என்றும் கீழிறங்கி வந்தார். தங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம்
என்றும் நானே வந்து தருகிறேன் என்றும் கூறி இன்னும் ஒரு மாதத்தில் தூக்கி
எரியப்போகும் JIO நம்பரை கொடுத்துவிட்டு நான் எஸ்கேப்.
Grievance Redressal என்பது எல்லா சேவைகளுக்கும் அந்தந்த
நிறுவனங்களே நடத்துகிறது எனபதும் மேலும் அவற்றை கவனிக்க மத்திய அரசின் குறை தீர்
வெப்சைட்டும் உறுதுணையாக இருக்கிறதென்பதும் அவை செவ்வனே வேலை செய்கிறதும் என்பதும்
இத்ன் மூலம் திண்ணமாகிறது.
இது ஒரு விழிப்புணர்வுக்காகவே எழுதபட்டது.
Website Link: http://pgportal.gov.in/GrievanceNew.aspx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக