பார்த்த உடனே யாரிடம் வேண்டுமானாலும் எதை பற்றியும் பேசிவிடும் பழக்கம் என்னுடைய முன்னாள் boss இடம் கற்றுக்கொண்டது இல்லை இல்லை தொற்றிக்கொண்டது.
அலுவலகத்திற்கு
தினமும் ஒரு மணி நேர ரயில் பயணம். முதல் முறை பார்த்தபொழுது, பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு,
அவர் இன்று என்ன
சாப்பிட்டார், எதை
டிவியில் விரும்பிப்பார்த்தார், குழந்தைகளிடம்
ஏன் இன்று கோபம் கொண்டார், கிரிக்கட்
ஸ்கோர், காட்டன்
பேண்ட், பட்டன்
மொபைல், ரிங்க
ரிங்க ரிங்கா ரிங்காரே பாட்டு, புலுசு
குழம்பு, தான்
வெயிட் போட்டது, தொப்பை,
காங்கிரஸ்
கவர்ன்மென்ட், பாலிசி,
ஹேர்ஸ்டைல் என
எங்கெங்கோ பேச்சு தொட்டு வளர்ந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த இந்த
சந்திப்பில் எனக்கு நினைவில் உள்ளது மட்டுமே மேலே. அவர் பகிர்ந்தது இன்னும்
அதிகம்.
அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை அங்கங்கு இருப்பவரிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் அங்கு ஆரம்பித்தது.
'நம்மளால புதுசா ஒரு ஆளுகிட்ட ஜெல்லாகிறது கஷ்டம்ங்க' என்ற கேட்டகரியிலிருந்து, 'வாங்க பழகலாம்' என்கிற ரேஞ்சுக்கு மாறியாகிவிட்டது. வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது முன்னிற்பவரிடம், மீட்டிங்கில் அருகில் அமர்ந்திருக்கும் மற்ற துறை ஆட்களிடம், பஸ்ஸில், மெக்கானிக் ஷாப்பில், இட்லி பார்சல் கட்டும் நேரத்தில், கீரை பாட்டி, தெருவில் போளி விற்பவர், மட்டன் பாய், கோவில் பூஜாரி, ஓலா ட்ரைவர், தெருவில் இருக்கும் வாண்டுகள் என எல்லாரிடமும் 'அப்புறம்' என்று சகஜமாக இயங்க முடிகிறது.
அதற்காக எல்லாரிடமும் எல்லாம் என்றில்லை. அங்கங்கு, அவரவரிடம் அப்பப்போதைக்கு பங்கம் இன்றி கலகலப்பாக கடத்தி விட முடிகிறது. கார் ஸ்பாவில் வெறும் பதினெட்டே நிமிடங்கள் பழகிய ஒருவர், ATM கார்டு போன்ற ஒரு பிரைவேட் மேரேஜ் இனிவிட்டேஷனை, மீண்டும் அச்சு அடித்து தரும் அளவுக்கு ஒரு கஜகஜா மெயின்டைன் பண்ண முடிகிறதென்றால், சுழி நம்மவர் போட்டது.
திடீரென்று பாஸ் நினைப்பு ஏன்? ஏதேனும் விபரீதமா? இல்லை. இல்லை. குத்துக்கல் போல நன்றாகத்தான் இருக்கிறார். டிக்கட் வாங்கி பரலோகம் சென்றால் தான் புகழ் பாடி நினைவு கூற வேண்டுமா?
இருக்கும்போதே
கொண்டாடிவிடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக