மூணு மேஜிக்கள் வார்த்தை இருக்கு. பெரும்பாலும் அதை யூஸ்
பண்ணா நமக்கும் மத்தவங்களுக்கும் மனசு நோகாம அப்புறம் சேதாரம் இல்லாம தப்பிச்சிரலாம்.
முதல் வார்த்தை ‘Thank
You’
நமக்கு என்ன வச்ச வேலை ஆளா மத்தவங்க. ஒரு மொபைல் சார்ஜர பக்கவாட்டு
டேபிள்ல இருந்து எடுத்து தந்தா கூட thanks
சொல்லலாம். கியுல முன்னாடி போகவிட்டா, காசு வாங்கிட்டு
பேலன்ஸ் கொடுத்தா, நாம வரதுக்காக கதவ திறந்து பிடிச்சிருந்தா, டெலிவரி பாய்க்கு, சேல்ஸ் கேர்ளுக்கு, சர்வருக்கு இப்டி ஏகப்பட்ட இடம் இருக்கு. வாய்ப்பு இருக்கு. ஒண்ணும் பெரிசா
யோசிக்க வேண்டாம். எங்கல்லாம் நமக்கு பிடிக்கிற மாதிரி யாரு நடந்துக்கிட்டாலும் சொல்லலாம்.
அழகா சின்னதா புன்னகைச்சு ஒரு தேங்க்ஸ் சொல்லி எந்த அளவுக்கு ரெஸ்பொன்ஸ் கிடைக்குதுனு
தான் பாருங்களேன்.
இரண்டாவது வார்த்தை ‘Please’
ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் ஆகட்டும், இல்ல மனைவிகிட்ட தண்ணி
எடுத்து கொடுன்னு (அவ்ளோ வசதியா என்ன?) சொல்றதாகட்டும், அட்ரெஸ் கேக்கும்போது, மெயில்ல ஒரு டேட்டா கேக்கும்போது
அந்த வார்த்தைய உபயோகிக்கிறதுல எந்த தயக்கமும் தேவையில்லை. டக்குனு பதில் கிடைக்கும்.
வேலை ஆகும். நமக்கு செய்யணும்னு தலை எழுத்தா என்ன? இந்த மேஜிக்
வேர்ட்டுக்கு அப்டி ஒரு பவர்.
மூணாவது வார்த்தை ‘Sorry’
அது என்னமோ குடும்ப மானமே கப்பல் ஏறிடுங்கற மாதிரி இந்த வார்த்தைய
யூஸ் பண்றதுக்கு அவ்ளோ தயக்கம். சின்ன குழந்தைங்க கூட இந்த சாரி சொல்றதுக்கு அவ்ளோ
தயக்கம் காமிக்குது. பெருசுங்க கேக்கவே வேணாம். என்னமோ சாரி கேட்டுட்டா தோத்துட்டோங்க்ற
ரேஞ்சில யோசிக்க வேண்டியது. அது தோல்வியே கிடையாது. அங்க தான் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கோட
உறவு ஆரம்பிக்கிற இடம். அந்த மொமெண்ட மிஸ் பண்ணாம சாரி கேக்கலாம். ஒண்ணும் தப்பில்ல.
ஆஃபிஸ்ல ஒருத்தர் இருக்கார். அவர் உதவியே பண்ணலன்னாலும் கூட
அடிக்கடி நம்பிள் ‘thank
you’ சொல்றது உண்டு. அவருக்கு ஏன் சொல்றோம்னு தெரியாது. உபகாரம் பண்ணலன்னாலும்
உபத்திரவம் பண்ணாம இருந்ததுக்கு உனக்கு ஒரு கோடி கும்பிடுயான்ற thank you தான் அது.
ஆக, கூச்சப்படாம இந்த மூணு வார்த்தையையும் உபயோகிச்சிங்கன்னா, வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜான் சொல்றமாதிரி வருடத்தின் இந்த நாள் மட்டுமல்ல
எல்லா நாளும் பொன்னாள் தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக