மக்களுக்கு
இப்ப ஓரளவு சிறுதானியங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு கிடைச்சிருக்கு அப்படின்னா
அதுக்கு முக்கிய காரணம் மருத்துவர் கு.சிவராமன். தாராளமா இவரோட போட்டோவ நீங்க உங்க
பூஜை அறையில் வச்சு கும்பிடலாம். அந்த அளவுக்கு செயற்கையான உணவுகள், உணவு நிறமிகள், உணவில் சேர்க்கப்படும் ரசாயன
பொருட்கள்னு கடந்த 10 ஆண்டுகள்ள
ஒரு பெரிய விழிப்புணர்வு புரட்சியவே செஞ்சிருக்காரு. அது மட்டும் இல்லாம ஆறாம் திணை, மருந்தென வேண்டாவாம் அப்டினு ஏகப்பட்ட
புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
அந்த
வரிசையில விகடன்ல இப்போ மருத்துவர் அருண்குமார் ஒரு தொடர் எழுதிட்டு வரார்.
எத்தனையோ ஆரோக்கியம் பற்றிய தொடர்கள் படிச்சிருந்தாலும் இந்த தொடர்
எல்லாத்திலிருந்தும் ரொம்ப வித்தியாசப்பட்டு இருக்கு. எப்டினா உணவுனு நாம் சொல்ற
வியஷயங்கள்ள என்னவெல்லாம் (macro, micro nutrients) இருக்கு. அது உடலுக்குள்ள போய்ட்டு எப்டி
செரிமானம் ஆகுதுனு தெளிவா ஒரு பாமரனுக்கும் புரியரா அளவுக்கு சொல்றார்.
முட்டை
நல்லதா கெட்டதானு ஆரம்பிச்ச இவருடைய தொடர், புழுங்கல் அரிசி மற்றும் பச்சை அரிசி,
மாவுச்சது
சம்பந்தப்பட்ட கோதுமை, மைதா,
ரவை மற்றும்
சிறுதானியங்கள், அதை
சாப்பிடவேண்டிய முறைகள், குளிர்ந்த்
நீர், வெள்ளை
சக்கரை, பால்,
உப்பு சத்துனு நாம
வச்சிருக்குற பல நம்பிக்கைகள ஆதாரப்பூர்வமா தெளிவுபடுத்துறது இந்த கட்டுரைகளோட
சிறப்பு. நீயா நானா ப்ரோக்ராம்லா குழந்தைகள் மதிய உணவு சம்பந்தப்பட்ட எபிசொடுக்கு
ஸ்பெஷல் கெஸ்ட்டா வந்திருப்பார். இன்னொன்னு முக்கியமா என்ன சொல்றாருன்னா எதை
சாப்பிட்டாலும் அளவா சாப்பிடுங்க அப்படின்னு தான் சொல்றாரு. எதையும் ஒதுக்கி வைக்க
தேவையில்லை அப்படிங்கறது அவருடைய வாதம்
மிஸ்
பண்ணக்கூடாத தொடர். இன்னும் சில நாட்கள்ள புத்தகமா தொகுத்து வெளியிடுவாங்க.
அவசியம் வாங்கி படிங்க ‘ஆரோக்கியம் ஒரு பிளேட்’.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக