திங்கள், செப்டம்பர் 12, 2022

கமர்சியல் மூவி

 

வித்தியாசமான ஜானர்ல படம் பண்றேன் அப்படிங்கற பேர்ல கடைசி பத்து வருஷமும் விதம் விதமான டைப்புல தமிழ் சினிமால படம் எடுத்து வச்சிருக்காங்க. ரியாலிட்டி மூவி, ஆர்ட் மூவி, ஹாரர் காமெடி மூவி, திரில்லர் மூவி, டிடெக்டிவ் மூவி, பிளாக் காமெடி மூவி இப்படி பல ஜானரில படம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க இதெல்லாம் நல்லா இருக்கு அப்படிங்கறதுல எந்தவிதமான டவுட்டுமில்ல. ஆனா இந்த படங்கள் எல்லாம் வந்தபிறகு கமர்ஷியல் படங்களுக்கான மரியாதை ரொம்பவே குறைஞ்சிடுச்சு. வரத்தும் கம்மி ஆகிடுச்சு. தியேட்டருக்கு போனோமா அஞ்சு பாட்டு அஞ்சு ஃபைட்டு நடுநடுல காமெடி என்ஜாய் பண்ணமோ, கூட சேர்ந்து அழுதோமா அப்படின்ற மாதிரியான ஒரு கமர்சியல் மூவி இப்பலாம் வரதே இல்ல.

 

அந்த மாதிரி ஒரு படம் பார்க்கலாம் அப்படின்னா இப்ப சமீபத்தில் வந்த 2 படம் நல்லா இருக்குன்னு சொல்லலாம். ஒன்னு விருமன். ஏகப்பட்ட கேரக்டர்கள். ஆனா ஒவ்வொரு கேரக்டருக்கும் தெளிவா கேரக்டரைசேஷன் பண்ணி இருக்காங்க. படம் ஸ்டார்டிங்லேயே அப்பாவும் எதிர்க்கிற, அதுவும் கொலை காண்டுல இருக்கிற பையன் கேரக்டர் அப்படிங்கறது கொஞ்சம் வித்தியாசமாகவும் ஈஸியா அட்ராக்ட் பண்ண மாதிரியும் அமைஞ்சிருக்கு. அதுலயும் அவங்க அப்பன ஒருத்தன் அடிச்சிடான் அப்படிங்கறதுக்காக அவனுக்கு மோதிரம் போட்டதெல்லாம் லந்துலேயும் பெரிய லந்து.  

 



திருச்சிற்றம்பலம் படத்தில தனுஷ் அவங்க அப்பா கூட பேச மாட்டார். அதுவும் பத்து வருஷம். ஏன் அப்பா கிட்ட பேசவே இல்ல? என்ன காரணமா இருக்கும் அப்படின்னு நமக்கு குடைச்சலா இருக்கும். பிளாஷ்பேக் பார்த்தோம்னா அந்த காரணம் அந்த அளவுக்கு ஜஸ்டிபை பண்ற மாதிரி இருக்காது. ஏன்னா ஆக்சிடென்ட் பண்ணுனதற்கான காரணம் இவங்க அப்பாவே இல்லை. அதுக்காக இவ்வளவு நாள் பேசாம இருந்தது அப்படிங்கிறது கொஞ்சம் ஒட்டாது. அதே மாதிரி விருமன் படத்திலேயும் கார்த்தி அவங்க அப்பா கிட்ட பேசமாட்டார். என்னடா இங்கேயும் இதுதானா? இங்க என்ன ரீசன் இருக்குமோனு யோசிக்கும் போது ஒரு பிளாஷ்பேக் செம எமோஷனலா வரும். அதுவும் அவங்க அப்பா மேல நமக்கு கோவம் வர்ற அளவுக்கு இருக்கும்.

 

வின்னர் படத்துக்கு வடிவேலுகிட்ட டேட்ஸ் கேட்கும் போது அவரால் கொடுக்க முடியல. ஏன்னா அவரோட கால்ல அடிபட்டு நடக்க முடியாம இருந்தாரு. அதனால சுந்தர் சி என்ன பண்ணிறுப்பார்னா ‘நீங்க வந்து நடிச்சுக் கொடுங்க. உங்களை நடக்க முடியாத ஒரு கேரக்டர்தான் எழுதிருக்கேன் அப்படின்னு சொல்லி அந்த படத்தில அவரை நடிக்க வைத்திருப்பாரு. படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதே மாதிரி இதுல சூரிக்கு ஏதும் அடிபட்டுச்சான்னு தெரியல. நொண்டி நொண்டி நொண்டி நட்ப்பாரு. டைமிங் காமெடி ஓரளவுக்கு தான் ஒர்க் அவுட் ஆகிருக்கு.

 

இதே மாதிரி இன்னொரு படம் யானை. ஹரிய பத்தி சொல்லவே தேவையில்லை. இந்த காலத்து sp முத்துராமன்னு சொல்லலாம். அப்டி ஒரு பக்க கமெர்சியல் கேரக்டர். அவருடைய ஸ்கிரிப்ட் அவ்வளவு வேகமா இருக்கும். ஸ்டார்டிங்ல ஒரு சீன் இருக்கு பாருங்க. சுமோ காரோட ஸ்டியரிங்கை காருக்கு உள்ளிருந்து காமிப்பாங்க. அப்படியே ரேயர் சீட், அப்டியே சுமோவோட ரியர் கண்ணாடி, கொஞ்சம் ஸும் அவுட் பண்ணி ரோடு, அப்டியே இன்னும் கொஞ்சம் சூம் அவுட் பண்ணுனா ரோட்ல நூறு வண்டி ஓடும், பாம்பன் பாலத்தையே முழுசா காமிச்சிருப்பாரு. அதுவும் ரெண்டே செகண்ட்ல இந்த சீன் ஓடும். படம் முடியுற வரைக்கும் இதே வேகம்தான். சும்மா சொல்லக்கூடாது அருண்விஜய் நல்லாவே நடிச்சிருக்காரு. அப்புறம் ஏன் தான் கிளிக் ஆகமாட்டேக்குதுணு தெரில. அதே மாதிரி இந்த படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள். எந்த கேரக்டரையும் எக்ஸ்ட்ரா பிட்டிங்க்னு சொல்ல முடியாது. அதுமட்டுமில்லாம அவங்க வீட்டுக்குள்ளே எப்பவுமே இந்த கூட்டம் இருக்கும் அப்படிங்கற மாதிரியான ஒரு ஃபீல் இருக்கும். ஹரியோட டச். ரெண்டு பைட் சீனு. எல்லாமே சிங்கிள் ஷாட். திரும்பி திரும்பி அடிசிட்டே இருக்காரு. அருண் விஜயோட built க்கு அந்த பைட் சீன் நம்புற மாதிரி தான் இருக்கு. சென்டிமெண்ட் எமோஷனல் வசனத்துக்கு கொஞ்சம் கூட கொறச்சல் இல்ல.

 

இந்த இரண்டு படமுமே ஞாயித்துக்கிழமை மத்தியானம் சாப்பிட்டு முடிச்சு ரிலாக்ஸ்டா குடும்பத்தோட டைம் பாஸ் பண்ணலாம் அப்படிங்கற மாதிரியான படங்கள்.

 

 

 

கருத்துகள் இல்லை: