இசையை
இன்ஜினீயரிங் என்று சொல்வதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இருந்தது
கிடையாது. என்ஜினீயரிங் என்ன, பல படிகள் மேல் என்றே சொல்லலாம். அப்படி ஒரு செய்கை, தரம் அவ்வளவு பாடல்களில் பொதிந்து கிடக்கின்றன.
தனது
பதினைந்தாவது வயதில் ஹரிணி பாடிய நிலா காய்கிறது பாடலின் வரிகள் கீழே,
நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ... வானும் மண்ணும் நம்மை வாழச்
சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
இதில்
' மாற்றம் ஏதும் இல்லையே ' க்குப்பிறகு வரும் 'ஆ ஆ ஆ' ஆலாபனை தான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பாடலில் ஒரே ஒரு முறை
மட்டுமே வரும் இந்த ஆலாபனை மற்றும் வரிகள் பிறகு வருவதில்லை. மத்தியஸ்தாயில்
செல்லும் ' நிலாக் காய்கிறது முதல் உன்னைத்
தீண்டும் ' வரிகள் பிறகு ' காற்று வீசும் ' இல் உச்சஸ்தாயிக்கு பயணிக்கிறது.
அடுத்த வரிக்கு முன் லைட்டாக ஒரு breath எடுத்துக்கொள்ள
இசைப்புயலால் கட்டமைக்கப்பட்டது இந்த ஆலாபனை என்பது அடியேனின் கருத்து.
' ஆ ஆ
ஆ ' சின்னதாக போய்விட்டதே என்று பதறிய இசைப்புயல்
இன்டர்லுடில் தரமான ஒரு கமகம் அதனூடே ஹரிணிக்கு திருப்தியாக ஒரு ஆலாபனை என்று
விருந்தே படைத்திருப்பார். மேஜிக்.
நிற்க.
ஹரிணி வெர்ஷன் பாடலில் மட்டும் தான் இது தகும். ஹரிஹரன் வெர்ஷனில் ஆல்ரெடி அவர் டீ
குடிக்கும் அளவுக்கு ஒரு இடைவெளி விட்டுத்தான் ' ஆ ஆ ஆ ' க்கு வருகிறார்
கொட்டிக்கிடக்கின்றன.
சுகித்திருப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக