காலை தினமும் நடைபயிற்சி முடித்து அந்த வழியாக வருவதுதான் வழக்கம். வரும் வழியில் இருக்கும் தேவாலயத்தில் ஆறு மணிக்கு மணி அடித்து ஏசுவின் பாடலை ஒலிப்பார்கள். பல முறை கேட்ட ராகம் போல் தோன்றினாலும், அவசரகதியில் ஒரு முறையேனும் நின்று கேட்டதில்லை. இன்றும் அதுபோல் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே என்று தோன்றவே, அருகில் சென்றுதான் கேட்டு பார்க்கலாமே என்று யத்தனித்தென். காதில் ஒலித்த அந்த பாடல்,
'தேன் இனிமைய...ிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே'
நினைவு கொசுவர்த்தி சுருளாக சுருள, காலச்சக்கரத்தில் ஒரு பத்து வருடம் பின்னோக்கி சென்றது. தூய யோவான் மேனிலைப்பள்ளி. ஏழு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளி. அந்த ஆறு வருடங்களும், காலை ஒன்பதிற்கு அடிக்கும் மணிக்கு பிறகு, வகுப்பின் மூலையில் சதுரமாக தொங்கிகொண்டிருக்கும் ஒலிபெருக்கியை பார்த்துக்கொண்டே அதில் இருந்து ஒலிக்கும் பிரேயர் பாடல்களை கேட்டும், பாடியும், மற்றவன் பாடுகிறானா என்று ஓரக்கண்ணில் பார்த்தும் கழித்த பொன்னான நாட்கள். பரந்து விரிந்த அந்த பள்ளியின் (சுமார் 80000 சதுர அடி) எந்த மூலையில் யார் சென்று கொண்டிருந்தாலும் சரி, ஒன்பது மணி பிரேயர் பாடல் ஒலிக்கும்போது அந்தந்த இடத்தில் அங்கேயே நின்று இறைவனுக்கு நன்றி கூறி பிரார்தித்து பின் நகரும் ஒழுக்கத்தை கற்று கொடுத்த பள்ளி. சிறு துளி பேரு வெள்ளமாக, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல், அங்கு கற்று கொண்ட ஒழுக்கம் இன்று வரையில் அலுவலக வேலை முதற்கொண்டு தனி மனித வாழ்விலும் பலருக்கு உதவியிருக்கும் என்பது திண்ணம்.
'தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
தந்தானைத் துதிப்போமே
என்ற அடுத்த பாடல் ஒழிக்க ஆரம்பித்திருந்தது.கள்ளனை துரத்தும் நாய் போல் உருண்டோடி, வேர்த்து விறுவிறுத்து, தொட்டியில் கழனியை குடிக்கும் மாடு போன்று சோறு தின்று, குதிரை போல் ரயிலிலும் பேருந்திலும் நின்றுகொண்டே தூங்கி கழிக்கும் தேமே என்ற வாழ்கையில், அவ்வப்போது இது போன்று பால்யத்தை நினைவுபடுத்தும் சங்கதிகள், படித்தோம் படுத்தோம் என்று டெட்லைன் போன்று பரபரப்பு இல்லா, மீளா வாழ்கைக்கு திரும்ப துடிக்கிறது என்பதை மறுதலிக்க இயலாது
'தேன் இனிமைய...ிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே'
நினைவு கொசுவர்த்தி சுருளாக சுருள, காலச்சக்கரத்தில் ஒரு பத்து வருடம் பின்னோக்கி சென்றது. தூய யோவான் மேனிலைப்பள்ளி. ஏழு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளி. அந்த ஆறு வருடங்களும், காலை ஒன்பதிற்கு அடிக்கும் மணிக்கு பிறகு, வகுப்பின் மூலையில் சதுரமாக தொங்கிகொண்டிருக்கும் ஒலிபெருக்கியை பார்த்துக்கொண்டே அதில் இருந்து ஒலிக்கும் பிரேயர் பாடல்களை கேட்டும், பாடியும், மற்றவன் பாடுகிறானா என்று ஓரக்கண்ணில் பார்த்தும் கழித்த பொன்னான நாட்கள். பரந்து விரிந்த அந்த பள்ளியின் (சுமார் 80000 சதுர அடி) எந்த மூலையில் யார் சென்று கொண்டிருந்தாலும் சரி, ஒன்பது மணி பிரேயர் பாடல் ஒலிக்கும்போது அந்தந்த இடத்தில் அங்கேயே நின்று இறைவனுக்கு நன்றி கூறி பிரார்தித்து பின் நகரும் ஒழுக்கத்தை கற்று கொடுத்த பள்ளி. சிறு துளி பேரு வெள்ளமாக, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல், அங்கு கற்று கொண்ட ஒழுக்கம் இன்று வரையில் அலுவலக வேலை முதற்கொண்டு தனி மனித வாழ்விலும் பலருக்கு உதவியிருக்கும் என்பது திண்ணம்.
'தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
தந்தானைத் துதிப்போமே
என்ற அடுத்த பாடல் ஒழிக்க ஆரம்பித்திருந்தது.கள்ளனை துரத்தும் நாய் போல் உருண்டோடி, வேர்த்து விறுவிறுத்து, தொட்டியில் கழனியை குடிக்கும் மாடு போன்று சோறு தின்று, குதிரை போல் ரயிலிலும் பேருந்திலும் நின்றுகொண்டே தூங்கி கழிக்கும் தேமே என்ற வாழ்கையில், அவ்வப்போது இது போன்று பால்யத்தை நினைவுபடுத்தும் சங்கதிகள், படித்தோம் படுத்தோம் என்று டெட்லைன் போன்று பரபரப்பு இல்லா, மீளா வாழ்கைக்கு திரும்ப துடிக்கிறது என்பதை மறுதலிக்க இயலாது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக