கடந்த வாரம்
முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது.
மாம்பலம் தாண்டி சில நிமிடங்களில் டிடிஆர் வந்தார், வயது ஐம்பது மதிப்பிடலாம். ஒவ்வொரு டிக்கட்டாக பொறுமையாக சோதனை செய்தார். அருகிலிருந்தவர் தான் கொண்டு வந்திருந்த டிக்கட்டை காமித்து மூன்று பேர் வரவில்லை என்றார்.
‘ஓ, நான் இந்த டிக்கட்ல வேணா Not Travelled னு எழுதித்தரேன். நீங்க போய்ட்டு இந்த டிக்கட் காமிச்சு காசு திரும்ப வாங்கிக்கலாம்.’ ...என்றார்.
பக்கத்திலிருந்தவருக்கு வாயெல்லாம் பல்லாக தெரிந்தது.
‘நல்லது சார். நான் கூட பணம் வேஸ்டாச்சேனு வருத்தபட்டேன். Last minute cancellation. அதான்.
‘நோ ப்ராப்ளம். நீங்க கிளைம் பண்ணிக்குங்க.’ என்றார்.
இவ்வளவு பொறுமையாய் ஒரு டிடிஆர் பேசி பார்த்ததில்லை.
அடுத்து என்னுடைய டிக்கட்டை காட்டினேன்.
‘சார், ‘excess fare’ கட்டணும்’. என்றார்
‘Fare Revision’ முன்பே டிக்கட் புக் செய்திருந்ததினால், வித்தியாசத்தொகையை ‘excess fare’ ஆக, ரயிலில் டிடிஆரிடமே கட்டலாம்.
தன் பாக்கெட்டில் கை விட்டு ரசீது புக்கை எடுத்து, PNR நம்பர், From, To என எல்லா விவரங்களையும் அதில் பொறுமையாக எழுதி கையில் குடுத்தார். முப்பது ரூபாய்கே ரசீது எழுதிருந்தார். வழக்கமாக முப்பத்தெட்டு ‘excess fare’ வரும்.
‘சார். முப்பதெட்டு ரூபானு நினைக்கிறேன். செக் பண்ணுங்க’ என்றேன்.
குனிந்து செக் பண்ணியபிறகு, ‘ஆமா தம்பி. கரெக்டு தான். முப்பதெட்டு ரூபானு போட்டுருக்கு. சரியா தெரியல. என்றார்.
மீண்டும் ரசீது புக்கை எடுத்து PNR வகையறாவை எழுத ஆரம்பித்தார்.
‘சார். அதே ரசீதுல முப்பத, முப்பத்தெட்டுனு மாத்திடலாமே.’ என்றேன்.
உடனே பதட்டபட்டவர், ‘அது கூடாது தம்பி, Govt விஷயம். Audit ப்ராப்ளம் வரும். இதெல்லாம் நாம கரெக்டா இருக்கனும்.’ சொல்லிவிட்டு ஒரு இரண்டு நிமிடம் பொறுமையாக எழுதி, எட்டு ரூபாய்க்கான ரசீதை என்னிடம் குடுத்தார்.
அந்த கேப்பில் அருகிலிருந்தவர், டிடிஆர் ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்குறாரே’ என்று என காதை கடித்தார். ஒன்றும் சொல்லாமல் திரும்பினேன்.
பர்ஸில் சில்லரை இல்லாததால், நூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்டினேன்.
‘அய்யோ. இப்பதான் தம்பி, கலெக்ஷன் ஆரம்பிச்சேன். சில்லரை இல்லை. ரசீதுல வேணா எழுதி தரேன் என்று நூறு ரூபாயை வாங்கியவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மீண்டும் நூறு ரூபாயை என் கையிலே கொடுத்து விட்டு ‘வேணாம் தம்பி, நீங்களே சில்லரை மாதி கொடுங்க’ என்றார்.’
‘சார், ரசீத வேற குடுத்துட்டீங்க, வேணாம் நீங்களே வச்சுக்குங்க. சில்லரை கலெக்டானதும் குடுங்க என்றேன்.
‘அய்யோ, உங்க கிட்ட வாங்கிட்டு நாம்பாட்டுக்கு மறந்துட்டேனா கஷ்டம். நீங்க கொடுக்க மறந்தா கூட என் பாக்கெட்லேந்து எடுத்து கட்டிப்பேன். உங்க எக்ஸ்ட்ரா காசு நான் மறந்து எடுத்துட்டு போய்டக்கூடாது.’ என்று சொல்லியவர் அடுத்த கேபினுக்கு போய்விட்டார்.
அந்த ஒரு ஷணத்தில் டிடிஆர் எனக்கு காந்தியாய் தெரிந்தார்,
தற்செயலாக வந்த மினரல் பாட்டிலை வாங்கிவிட்டு, சில்லரையை தேற்றினேன்.
கொண்டு போய் அவரிடம் குடுத்தேன். ‘தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு ரசீதை எழுத ஆரம்பித்தார்.,
மீண்டும் வந்து என் இருக்கையில் அமர்ந்தபோது, அருகிலிருந்தவர், ‘அப்பவே சொல்லல. இந்த ஆளு வித்தியசாமா இருக்காருனு, சரியான லூசுனு நினைக்கிறேன். அவர் பாக்கெட்லேந்து போட்டு கட்டுவாராம்.’
ஒரு முறை முறைத்துவிட்டு திரும்பி கொண்டேன்.
இப்போழுதெல்லாம் நேர்மை நியாயமாக நடந்துகொண்டால் லூசாகத்தான் தெரிவோம் போல.
முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது.
மாம்பலம் தாண்டி சில நிமிடங்களில் டிடிஆர் வந்தார், வயது ஐம்பது மதிப்பிடலாம். ஒவ்வொரு டிக்கட்டாக பொறுமையாக சோதனை செய்தார். அருகிலிருந்தவர் தான் கொண்டு வந்திருந்த டிக்கட்டை காமித்து மூன்று பேர் வரவில்லை என்றார்.
‘ஓ, நான் இந்த டிக்கட்ல வேணா Not Travelled னு எழுதித்தரேன். நீங்க போய்ட்டு இந்த டிக்கட் காமிச்சு காசு திரும்ப வாங்கிக்கலாம்.’ ...என்றார்.
பக்கத்திலிருந்தவருக்கு வாயெல்லாம் பல்லாக தெரிந்தது.
‘நல்லது சார். நான் கூட பணம் வேஸ்டாச்சேனு வருத்தபட்டேன். Last minute cancellation. அதான்.
‘நோ ப்ராப்ளம். நீங்க கிளைம் பண்ணிக்குங்க.’ என்றார்.
இவ்வளவு பொறுமையாய் ஒரு டிடிஆர் பேசி பார்த்ததில்லை.
அடுத்து என்னுடைய டிக்கட்டை காட்டினேன்.
‘சார், ‘excess fare’ கட்டணும்’. என்றார்
‘Fare Revision’ முன்பே டிக்கட் புக் செய்திருந்ததினால், வித்தியாசத்தொகையை ‘excess fare’ ஆக, ரயிலில் டிடிஆரிடமே கட்டலாம்.
தன் பாக்கெட்டில் கை விட்டு ரசீது புக்கை எடுத்து, PNR நம்பர், From, To என எல்லா விவரங்களையும் அதில் பொறுமையாக எழுதி கையில் குடுத்தார். முப்பது ரூபாய்கே ரசீது எழுதிருந்தார். வழக்கமாக முப்பத்தெட்டு ‘excess fare’ வரும்.
‘சார். முப்பதெட்டு ரூபானு நினைக்கிறேன். செக் பண்ணுங்க’ என்றேன்.
குனிந்து செக் பண்ணியபிறகு, ‘ஆமா தம்பி. கரெக்டு தான். முப்பதெட்டு ரூபானு போட்டுருக்கு. சரியா தெரியல. என்றார்.
மீண்டும் ரசீது புக்கை எடுத்து PNR வகையறாவை எழுத ஆரம்பித்தார்.
‘சார். அதே ரசீதுல முப்பத, முப்பத்தெட்டுனு மாத்திடலாமே.’ என்றேன்.
உடனே பதட்டபட்டவர், ‘அது கூடாது தம்பி, Govt விஷயம். Audit ப்ராப்ளம் வரும். இதெல்லாம் நாம கரெக்டா இருக்கனும்.’ சொல்லிவிட்டு ஒரு இரண்டு நிமிடம் பொறுமையாக எழுதி, எட்டு ரூபாய்க்கான ரசீதை என்னிடம் குடுத்தார்.
அந்த கேப்பில் அருகிலிருந்தவர், டிடிஆர் ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்குறாரே’ என்று என காதை கடித்தார். ஒன்றும் சொல்லாமல் திரும்பினேன்.
பர்ஸில் சில்லரை இல்லாததால், நூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்டினேன்.
‘அய்யோ. இப்பதான் தம்பி, கலெக்ஷன் ஆரம்பிச்சேன். சில்லரை இல்லை. ரசீதுல வேணா எழுதி தரேன் என்று நூறு ரூபாயை வாங்கியவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மீண்டும் நூறு ரூபாயை என் கையிலே கொடுத்து விட்டு ‘வேணாம் தம்பி, நீங்களே சில்லரை மாதி கொடுங்க’ என்றார்.’
‘சார், ரசீத வேற குடுத்துட்டீங்க, வேணாம் நீங்களே வச்சுக்குங்க. சில்லரை கலெக்டானதும் குடுங்க என்றேன்.
‘அய்யோ, உங்க கிட்ட வாங்கிட்டு நாம்பாட்டுக்கு மறந்துட்டேனா கஷ்டம். நீங்க கொடுக்க மறந்தா கூட என் பாக்கெட்லேந்து எடுத்து கட்டிப்பேன். உங்க எக்ஸ்ட்ரா காசு நான் மறந்து எடுத்துட்டு போய்டக்கூடாது.’ என்று சொல்லியவர் அடுத்த கேபினுக்கு போய்விட்டார்.
அந்த ஒரு ஷணத்தில் டிடிஆர் எனக்கு காந்தியாய் தெரிந்தார்,
தற்செயலாக வந்த மினரல் பாட்டிலை வாங்கிவிட்டு, சில்லரையை தேற்றினேன்.
கொண்டு போய் அவரிடம் குடுத்தேன். ‘தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு ரசீதை எழுத ஆரம்பித்தார்.,
மீண்டும் வந்து என் இருக்கையில் அமர்ந்தபோது, அருகிலிருந்தவர், ‘அப்பவே சொல்லல. இந்த ஆளு வித்தியசாமா இருக்காருனு, சரியான லூசுனு நினைக்கிறேன். அவர் பாக்கெட்லேந்து போட்டு கட்டுவாராம்.’
ஒரு முறை முறைத்துவிட்டு திரும்பி கொண்டேன்.
இப்போழுதெல்லாம் நேர்மை நியாயமாக நடந்துகொண்டால் லூசாகத்தான் தெரிவோம் போல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக