‘கெட்ட
பய சார் காளி’ என்று தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக கண்ணீரை துடைத்துவிட்டு
முள்ளும் மலருமில் தன் நடிப்பால் அசத்திய ரஜினியை, ரெட்டை வேடங்களில்
தன் இயல்பான நடிப்பால் ‘ஜானியில்’ அடுத்த
கட்டதிற்க்கு உயர வைத்திருக்கிறார் மகேந்திரன் என்று பலரால் அறியப்படும் அலெக்சாண்டர்.
பொதுவாக இவர் படங்களில்
அதிகம் ஆச்சர்யத்தை அளிப்பது, ஏழு அல்லது எட்டு கதாபாத்திரங்களூடே நகர்ந்து
செல்லும் வலிவான திரைக்கதையே. எங்கேனும் கொஞ்சம் கூட சுவாரஸ்யத்தை இழக்காமல் அசௌகர்யத்திற்கு
இடம் கொடுக்காமல் நகர்ந்து செல்கிறது. இவ்வளவு குறைவான பாதிரங்களுடன், அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை எளிதாக காட்சியமைத்து இரண்டு
மணி நேரத்திர்க்கும் மேலாக பார்வையாளர்களை கட்டி போட முடியுமா என்ற கேள்வியை அனாயாசமாக
தட்டி விட்டு தன் படைப்பின் மூலம் பதில் தருகிறார் மகேந்திரன்.
ஜானியாக கேடி ரஜினி.
வழக்கம் போல் ஒருவரை ஏமாற்றும் பொருட்டு செல்லும் இடத்தில் அர்ச்சனாவின் (ஸ்ரீதேவி)
குரலால் வசீகரிக்கபட்டு அவளுடன் பரீச்சயமாகிறார். சந்திப்பு நட்பாக, பின்
காதலாக பரிணாமம் பெறுகிறது. மற்றொருபுறம் விதய்சாகராக கருமி ரஜினி. பார்பர். பத்மாவால்
(தீபா என்று அழைக்கபடும் உன்னிமேரி) வஞ்சிக்கபட்டு இரு கொலைகளை செய்கிறார். இருவரையும்
போலீஸ் தேடுகிறது. பெண்கள் மேல் ஒரு வெறுப்பை சுமந்திருக்கும் பார்பர் ரஜினி, இருவரின் முக ஒற்றுமையை சாதகமாக்கி கொண்டு, தன்னை ஜானியாக
மாற்றிக்கொண்டு ஸ்ரீதேவியை ஏமாற்ற நினைக்கிறார். ஸ்ரீதேவியின் அப்பழுக்கற்ற அன்பின்
முன்னால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜானி செய்த குற்றத்திற்கும்
தானே பொறுப்பு என்று போலீசில் சரணடைகிறார். ஜானி அர்ச்சனா இணைகிறார்கள்.
ஜானியில் ரசிக்க வைத்த
சில விஷயங்கள்.
1.
மனதை வருடும் ஐந்து பாடல்கள். ‘ஒரு
இனிய மனது’, ‘என் வானிலே’, ‘செனோரிட்டா’, ‘ஆசைய காத்துல’, மற்றும் ‘காற்றே
எந்தன்’
2.
பண்ணைபுரம் ராஜாவின் ஒப்பற்ற பின்னிசை. படத்தை பார்க்கும்பொழுது
ஏற்படும் ‘impact’ இவர் தயவினால்.
3.
இசைஞானியிடம் ‘BGM’ மற்றும் பாடல்களை கறந்து, மிகைபடுத்தாமல் திரைக்கதையினுள் பாங்காக சொருகிய மகேந்திரனின் சாமர்த்தியம்.
4.
ரஜினி என்று துதிக்கபடும் மாபெரும் காந்த சக்தியின் நடிப்பாற்றல்.
அவர் நடிப்பை பயன்படுத்தி வெளிவந்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அநேகமாக அவர்
நடிப்பு காணாமல் போனது எஸ்.பி. முத்துராமனின் கைகளால் தானிருக்கும்.
5.
ஸ்ரீதேவியின் குரல். நன்றி நம்ரதா சவ்ஹேணி
6.
அர்ச்சனா ஜானிக்கான பிரேத்யேக BGM
7.
மகேந்திரனின் திரைக்கதை
8.
பார்பர் ரஜினியின் ஒன் லைன் தத்துவங்கள். முக்கியமாக ‘எப்பவுமே
ஒன்ன விட ஒன்னு பெட்டெராத்தான் தெரியும்.’
9.
மீண்டும் இளையராஜா.
இத்தனை கவித்துவமான
படங்களை இயக்கிய மகேந்திரன், தன் காலங்களில் அதிகம் கண்டுகொள்ளபடாதவர். முப்பது
வருடங்கள் கழித்து அவரது திரைகதைகள் இப்பொழுது பாடமாக எடுத்து கொள்ளப்படுகின்றன. போற்றபடுகின்றன.
மணிரத்னம் சினிமாவுக்கு வருவதற்கு தூண்டுதலாய் அமைந்தவர். முப்பத்தாறு வருடங்களில்
வெறும் பன்னிரெண்டு படங்கள் மட்டுமே மகேந்திரனிடமிருந்து பெற்றது, தமிழ் ரசிகர்களின் காலம் கடந்த குற்றமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக