பரிசுத்ததை தேடும்பொழுது மனசு சொல்லும் ஜோய் ஆலுக்காஸ்.
இல்லை. எனக்கு என் குழந்தை தான் தெரிகிறது.
அன்று நண்பகல், தட்டில் சாதத்தை போட்டு பாப்பாவிடம் நீட்டினேன்.
‘ஐ’ என்று வாங்கி கொண்டது.
‘என்னது இது?’ கேட்டது.
... ‘ரசம் புவ்வா பாப்பா, நல்லாருக்கும். சாப்பிடு. என்றேன்.
‘ரசம் புவ்வாவாஆஆஆஆஆ?’ இழுத்து கேட்டாள்.
‘ஆமா சாப்பிடு’
தட்டை கைய்யில் வாங்கி கொண்டு, அழகாக கால் நீட்டி அமர்ந்து மடியில் வைத்து கொண்டது. ஒரு கை சாதம் எடுத்து வாயில் போட்டாள். முகத்தில் ஏதும் மாறுதல் தெரியவில்லை. மென்று முழுங்கினாள். இரண்டாவது கை எடுத்து மீண்டும் வாயில் வைத்து மென்று கொண்டிருந்தாள்.
ஊரில் உள்ள அனைத்து தெய்வத்தையும் நினைத்து கொண்டிருந்தேன். எப்படியாவது இந்த தட்டு சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டாள் என்றால்.....
நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஆரம்பித்துவிட்டாள். இரண்டு கையும் தட்டில் இருந்தது.
‘பாப்பா, ஒரு கைல சாப்பிடுமா.’
ம்ஹூம். இரண்டு கையையும் வைத்து சப்பாத்தி மாவு பிசைவது போல சாதத்தை பிசைய ஆரம்பித்துவிட்டாள். இன்று கோபப்படக்கூடாது.
‘பாப்பா கைய்ய எடு. தட்ட கொடு. நான் ஊட்டி விடுறேன்.’
'வேணாம்ம்ம். குடு. நானே ச்சாபிடுறேன்’ என்றது.
மீண்டும் கையை வைத்து பிசைந்து இரண்டு கைகளில் சாதத்தை அள்ளி வாயில் வைத்தாள். அப்பாடா என்று நினைக்கும்போது, அவ்வளவு சாதத்தையும் ‘வே’ என்று துப்பினாள். லேசாக கோவம் எட்டிபார்த்தது.
‘பாப்பா, சாபிடுமா. துப்பக்கூடாது.’
‘ச்சரி, நல்லாருக்கும்ம்ம்’ என்றவள் இரு கைகளிலும் சாதத்தை அள்ளி தலையில் கொஞ்சம் முகத்தில் கொஞ்சம் கை கால்களில் கொஞ்சம் என்று தடவிக்கொண்டு என்னை பார்த்து கண்ணை மூடி சிரித்தாள். பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.
‘பாப்பா, இப்போ, சாப்டுறியா இல்லையா’
‘ம், ச்சாபிடுறேன்’ என்றவள், இரு கைகளிலும் சாதத்தை எடுத்து ரெக்கையடித்து பறக்கும் பறவை போல இரு பக்கமும் உதறி தூவ ஆரம்பித்தாள். உட்கார்ந்திருந்த இடமெல்லாம் சாதமாக கொட்டி, கோவம் தலைக்கேறியது.
‘நீ என்கிட்ட அடி வாங்கப்போற. ஒழுங்கா சாப்பிடபோறியா இல்லையா?.’
ஒருமுறை என்னை பார்த்துவிட்டு, கையில் கொஞ்சம் சாதத்தை எடுத்து, ஷெல்பிலிருந்த டெட்டி பியர் வாயில் கொஞ்சம் ஊட்டினாள். இன்னும் கொஞ்சம் எடுத்து அருகிலிருந்த நீளமான நாய்குட்டி பொம்மைக்கு கொஞ்சம், அப்புறம் அவளது சின்ன வயது சட்டையை போட்டிருந்த மிஸ் வேர்ல்ட் பொம்மைக்கு கொஞ்சம் என ஊட்டிவிட்டு, என்னருகில் வந்து, ‘நீ ச்சாப்பிடு, ரசம் புவ்வா நல்லாருக்க்க்க்க்கும்ம்ம்ம்’ என்று தலையை ஆட்டி ஆட்டி சொன்னபோது. தலைக்கேறிய கோபம் முழுவதும் மறைந்து உதட்டோரம் பூத்த சிறு புன்னகையையும், கண்ணில் துளிர்த்த நீரையும் தவிர்க்க முடியாமல் கட்டிக்கொண்டேன்.
பரிசுத்தமான அன்பும், அரவணைப்பும் மட்டுமே நிரம்பியது குழந்தைகளின் உலகம் போல. நாம் தான் அடிக்கடி மறந்துவிடுகிறோம், குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை.
Purity at the utmost form
இல்லை. எனக்கு என் குழந்தை தான் தெரிகிறது.
அன்று நண்பகல், தட்டில் சாதத்தை போட்டு பாப்பாவிடம் நீட்டினேன்.
‘ஐ’ என்று வாங்கி கொண்டது.
‘என்னது இது?’ கேட்டது.
... ‘ரசம் புவ்வா பாப்பா, நல்லாருக்கும். சாப்பிடு. என்றேன்.
‘ரசம் புவ்வாவாஆஆஆஆஆ?’ இழுத்து கேட்டாள்.
‘ஆமா சாப்பிடு’
தட்டை கைய்யில் வாங்கி கொண்டு, அழகாக கால் நீட்டி அமர்ந்து மடியில் வைத்து கொண்டது. ஒரு கை சாதம் எடுத்து வாயில் போட்டாள். முகத்தில் ஏதும் மாறுதல் தெரியவில்லை. மென்று முழுங்கினாள். இரண்டாவது கை எடுத்து மீண்டும் வாயில் வைத்து மென்று கொண்டிருந்தாள்.
ஊரில் உள்ள அனைத்து தெய்வத்தையும் நினைத்து கொண்டிருந்தேன். எப்படியாவது இந்த தட்டு சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டாள் என்றால்.....
நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஆரம்பித்துவிட்டாள். இரண்டு கையும் தட்டில் இருந்தது.
‘பாப்பா, ஒரு கைல சாப்பிடுமா.’
ம்ஹூம். இரண்டு கையையும் வைத்து சப்பாத்தி மாவு பிசைவது போல சாதத்தை பிசைய ஆரம்பித்துவிட்டாள். இன்று கோபப்படக்கூடாது.
‘பாப்பா கைய்ய எடு. தட்ட கொடு. நான் ஊட்டி விடுறேன்.’
'வேணாம்ம்ம். குடு. நானே ச்சாபிடுறேன்’ என்றது.
மீண்டும் கையை வைத்து பிசைந்து இரண்டு கைகளில் சாதத்தை அள்ளி வாயில் வைத்தாள். அப்பாடா என்று நினைக்கும்போது, அவ்வளவு சாதத்தையும் ‘வே’ என்று துப்பினாள். லேசாக கோவம் எட்டிபார்த்தது.
‘பாப்பா, சாபிடுமா. துப்பக்கூடாது.’
‘ச்சரி, நல்லாருக்கும்ம்ம்’ என்றவள் இரு கைகளிலும் சாதத்தை அள்ளி தலையில் கொஞ்சம் முகத்தில் கொஞ்சம் கை கால்களில் கொஞ்சம் என்று தடவிக்கொண்டு என்னை பார்த்து கண்ணை மூடி சிரித்தாள். பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.
‘பாப்பா, இப்போ, சாப்டுறியா இல்லையா’
‘ம், ச்சாபிடுறேன்’ என்றவள், இரு கைகளிலும் சாதத்தை எடுத்து ரெக்கையடித்து பறக்கும் பறவை போல இரு பக்கமும் உதறி தூவ ஆரம்பித்தாள். உட்கார்ந்திருந்த இடமெல்லாம் சாதமாக கொட்டி, கோவம் தலைக்கேறியது.
‘நீ என்கிட்ட அடி வாங்கப்போற. ஒழுங்கா சாப்பிடபோறியா இல்லையா?.’
ஒருமுறை என்னை பார்த்துவிட்டு, கையில் கொஞ்சம் சாதத்தை எடுத்து, ஷெல்பிலிருந்த டெட்டி பியர் வாயில் கொஞ்சம் ஊட்டினாள். இன்னும் கொஞ்சம் எடுத்து அருகிலிருந்த நீளமான நாய்குட்டி பொம்மைக்கு கொஞ்சம், அப்புறம் அவளது சின்ன வயது சட்டையை போட்டிருந்த மிஸ் வேர்ல்ட் பொம்மைக்கு கொஞ்சம் என ஊட்டிவிட்டு, என்னருகில் வந்து, ‘நீ ச்சாப்பிடு, ரசம் புவ்வா நல்லாருக்க்க்க்க்கும்ம்ம்ம்’ என்று தலையை ஆட்டி ஆட்டி சொன்னபோது. தலைக்கேறிய கோபம் முழுவதும் மறைந்து உதட்டோரம் பூத்த சிறு புன்னகையையும், கண்ணில் துளிர்த்த நீரையும் தவிர்க்க முடியாமல் கட்டிக்கொண்டேன்.
பரிசுத்தமான அன்பும், அரவணைப்பும் மட்டுமே நிரம்பியது குழந்தைகளின் உலகம் போல. நாம் தான் அடிக்கடி மறந்துவிடுகிறோம், குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை.
Purity at the utmost form
- ·


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக