திங்கள், டிசம்பர் 19, 2022

Beast of Bangalore: Indian Predator



90களில் பெங்களூரில் நடைபெற்ற தொடர் கொலை மற்றும் அந்த கொலையாளியை பற்றிய டாகுமெண்டரி.

சில எண்ணங்கள் 

1. தனியாக இருக்கும் பெண்கள் மட்டுமே உமேஷ் ரெட்டியின் டார்கட். இவன் ஒரு CRPF ஊழியன். வெளியே பயிரை மேய்ந்த கதை. கற்பழித்து கொலை செய்வது மட்டுமே இவனது பாணி. முதல் முறை சிக்கியது முதல் தப்பிப்பது மீண்டும் மாட்டுவது மீண்டும் தப்பிப்பது என்று இதுவே ஆறு முறை நடந்திருக்கிறது. பதினெட்டுக்கும் மேற்பட்ட பெண்கள். கொலைக்கான மோட்டிவ் என்பது சரியாக தெரியவில்லை. ஒரு வித சைக்கோ மனநிலை என்று மட்டுமே தெரிகிறது 

2. இவன் காரணமாத்தான் வீட்டு வாசலில் க்ரில் கேட் வைக்க ஆரம்பித்தனர் என்று ஒரு போலீசார் சொல்வது நம் முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறது. 

3. மூன்று எபிசோட்கள். மிக மெதுவாக செல்கின்றன. 1.5x ஸ்பீடே மெதுவாகத்தான் இருக்கிறது. 

4. பத்திரிக்கைக்கே தெரியாத பல விஷயங்களை டாகுமெண்டரிக்காக சேகரித்திருக்கின்றனர். அது சுவாரஸ்யமாக இருக்கிறது. 

5. கொலைகாரனை rarest of rare என்கிற கேட்டகிரியில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இருபது வருடங்களுக்கு மேல் நடந்த அந்த கேஸில் கடந்த மாதம் முப்பது ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. 

6. இரண்டு விஷயங்கள் ஈர்த்தன. ஒரு ஆண் விசாரணை அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறுகிறார். கொலைகாரன் எப்பொழுதுமே கற்பழித்து மட்டுமே கொலை செய்கிறான். கொலையான பெண்களை கூராய்வு செய்யும்பொழுது இதை உறுதி செய்கின்றனர். அனால் இவனிடமிருந்து தப்பித்த பெண்கள் இவன் கற்பழிப்பு செய்ததை மறைத்து திருட்டு கேஸ் என்று மட்டுமே கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கின்றனர். இரு பெண்களின் பிறழ் சாட்சி இவனின் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது. ஏன் பெண்கள் அந்த உண்மையை சொல்ல தயங்குகின்றனர் என்று கேட்கிறார். அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வியையும் வைக்கிறார்.

7. பெண்கள் அந்த உண்மையை வெளியில் சொல்ல தயங்குவது ஏன் என்று ஆண்களிடம் தான் கேட்க வேண்டும்? சமுதாயம் அந்த சுதந்திரத்தை பெண்களுக்கு அளித்திருக்கிறதா? மற்றும் தீர்ப்பு எழுதிய ஒரு ஆண் நீதிபதியின் இந்த கேசின் மீதான பார்வை ஆணாதிக்க மனோபாவத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது என்று ஒரு பெண் மனோதத்துவ நிபுணி விவரிக்கிறார். 

8. டாக்குமென்டரியின் மற்றுமொரு சிறப்பு, கொலையுண்ட பெண்ணின் 7 வயது சிறுவனை பேட்டிகண்டது. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளருகிறான் சிறுவன். பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுவன் விளையாட மைதானத்திற்கு செல்கிறான். சிறிது நேரத்தில் வீடு திரும்பும் அவன் ரத்த வெள்ளத்தில் அவனது தாய் கீழே கிடப்பதை காண்கிறான். கொலையாளி மிக சாந்தமாக இவனது தாயிற்கு உடல் நலன் சரியில்லை. ஆதலால் மருத்துவரை அழைத்து வருகிறேன் என்று இவனை காவல் வைத்துவிட்டு தப்பித்திருக்கிறான். ஒன்றுமறியாத சிறுவனோ அவனது தாயின் அருகில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்திருக்கிறான். அண்டை அயலார் வந்து பார்த்து போலீசுக்கு தெரிவித்து பின் அந்த சிறுவனை ஒரு கான்ஸ்டபிள் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று வளர்த்தது, அதன் பிறகு அவனை ஒரு ஹோமில் சேர்த்தது, ஒரு தம்பதி தத்து எடுத்தது, மற்றும் அந்த சிறுவன் வளர்ந்து தற்போது இருபத்தைந்து வயதில் அவனை பேட்டி கண்டது என்று விக்டிமின் கிளை கதை வரை விரிகிறது இதன் சிறப்பு. 

9. என்ன மாதிரியான மன நிலை அந்த மனிதனை இவ்வாறு செய்ய தூண்டியது என்று அறிந்து கொள்ள முற்படுவது தான் சமுதாயத்தின் பிணியை போக்கும் ஒரே வழி 

10. சற்று சஞ்சலப்படுத்தும் டாகுமெண்டரி தான். 

கருத்துகள் இல்லை: