இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஒத்துக்க முடியல.
என்னன்னா இந்த தலைவர் தான் இந்த திட்டத்த கண்டுபிடிச்சி தொடங்கி வச்சு இத்தனை பயனாளிகள் நல்லாருக்க இவருதான் காரணம்ங்கற ரேஞ்சுல விளம்பரத்த பாக்கும்போது தான்.
ஒரு திட்டம் அப்டிங்கறது ஆட்சியாளர்கள் கிட்ட உதிக்கிறது கிடையாது அப்படிங்கிறதுல எனக்கு துளி கூட சந்தேகம் இல்ல. 95 சதவீதம் அப்டித்தான் இருக்காங்க. அரசாங்க அதிகாரிகள் தான் திட்ட உறபத்தியாளர்கள். அதாவது அரசாங்கத்தோடு மூளை. இந்த அரசாங்கம் நல்லா செயல்படுறதுக்கும் இந்த அதிகாரிகள் தான் காரணம். காரி உமிழ்ற மாதிரி நடந்துகிறதுக்கும் இந்த அதிகாரிகள் தான் காரணம். உதாரணமா இந்த ஆதார் கார்ட் திட்டத்த சொல்லலாம். இத அறிமுகப்படுத்தும்போது எதிர்கட்சி கடுமையா எதிர்த்தாங்க. ஆனா அவங்களே ஆட்சிக்கு வரும்போது அத வெகு தீவிரமா செயல்படுத்துனாங்க. LPG டைரக்ட் பெனிபிட் ட்ரான்ஸபரும் இதே போல கதை தான். மத்திய அரசு மட்டும் இல்ல. மாநில அரச எடுத்துக்கிட்டாலும் இதே மாடல் தான். அங்க ஹிந்தி பேசுற ஒரு தொலைநோக்கு அதிகாரி. இங்க தமிழ் பேசுற தொலைநோக்கு அதிகாரி. அவ்ளோதான் வித்தியாசம். ஆனா விதை அதிகாரி போட்டதுதான்.
இந்த மாதிரி சூழ்நிலைல இந்த அரசியல்வாதிங்க பேரை மட்டும் போட்டு நாடு சுபிட்சமா இருக்கிறதுக்கே இவங்க தான் காரணம்ங்கற ரேஞ்சுல விளம்பரத்தை பாக்கும்போது கொஞ்சம் இல்லை நிறையவே எரிச்சல் வருது. அப்ப அந்த திட்டத்தை ப்ரோபோசல், எஸ்டிமேஷன், EC, பிளானிங், ஸ்கெட்யூல்லாம் போட்டு அதை செயல்படுத்தறதுக்கு அவருக்கு மேல இருக்குற அதிகாரி மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஒவ்வொரு தடவையும் சளைக்காம புளி போட்டு விளக்கி எடுத்து சொல்லி அப்ரூவல் வாங்குற அந்த அதிகாரி என்ன தொக்கா. எத்தனை தடவை ஆட்சி மாறினாலும் திட்டங்கள் உற்பத்தியாகறதும் வெற்றிகரமா செயல்படுறதும் அதிகாரிகள் கைல மட்டும் தான் இருக்கு. அதை ரெககனைஸ் பண்ணினாலே மற்ற இன்டெர்மீடியேட் அதிகாரிகளுக்கு ஒரு வினையூக்கியா இருக்கலாம்.
அதவிட்டுட்டு புது புது சொக்காயா போட்டுக்கிட்டு கைய மேல தூக்கிட்டு 210 டிகிரிக்கு பல்ல காமிச்சிட்டு போஸ் கொடுத்து விளம்பரபடுத்துறத நிறுத்திக்கிட்டா செலவு மிச்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக