சனி, ஜூலை 24, 2021

சார்பட்டா

வருங்கால முதல்வர் அண்ணன் உதயநிதி அவர்கள், சார்பட்டா படத்தை பற்றி முகநூலில் உள்ளீடு செய்திருக்கும் அதே நாளில் இந்த படத்தை பற்றி எழுதுவதில் உவகையடைகிறேன். 😃



நெகிழியை முதலில் உமிழும், அசை போடும் மாடைப்போல, படம் பார்த்து முடித்த கையோடு, சில செரிக்காத பகுப்பாய்வுகள்.

1. என்னதான் சலிப்பு தட்டவில்லையென்றாலும், இந்த படத்திற்கு மூன்று மணி நேரம் என்பது தேவையில்லாத ஆணி 

2. வலிந்து திணிக்கப்பட்ட எமெர்ஜென்சி காட்சிகள்.  கபிலன் தடம் மாறுவதற்கான காரணமாக பசுபதியை விலக்கி வைக்க வேண்டும் என்றால் அதற்கு எமெர்ஜென்சி தேவையில்லை. கோபத்தில் ஒரு கொழுக் மொழுக் பயில்வானை சொருகியிருப்பது போல கதையை அமைத்திருக்கலாம். கதையின் போக்கோடு ஒட்டாமல் தனித்து நிற்கும் இந்த அரசியல் காட்சிகள் புரியவில்லை. குறியீடோ?

3. அழுவதற்காகவே இரு கதாபாத்திரங்கள் என்பது போல அனுபமா மற்றும் துஷராவையும் பயன்படுத்தியிருப்பது. இரு பாடலுக்கு ஆடிச்செல்லும் கதாநாயகிக்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை. அழுத்தமான பெண் பாத்திரப்படைப்பு மிஸ்ஸிங்.

4. கபிலனை கொல்வதற்கான வாய்ப்புகள் கதை நெடுகிலும் இருந்தாலும், அவற்றை சாசுவதமாக தவிர்த்திருப்பது, கமெர்சியல் வட்டத்துக்குள் இந்த படைப்பை இழுத்து செல்லும் ஒரு அபாய quick sand.

நிறைகள்

1. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. பருப்பு சாதத்துடன் நெகிழ்ந்து கலந்திருக்கும் பசு நெய்யை போல அகழ்ந்து விரவி மணம் வீசுகிறது.

2. முரளியின் ஒளிப்பதிவு. ரிங்கிற்குள் நடக்கும் குத்துச்சண்டையை அலுப்புத்தட்டாமல் பரபரப்புடன் அசரடிக்கும் வகையில் காட்சிப்பதிவு செய்ததில் படத்தின் பெரும்பாலான வேலை முடிந்துவிட்டது 

3. ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் காட்சியை நகர்த்தியதில், தமிழ்ப்பிரபா மற்றும் ரஞ்சித்தின் திரைக்கதை கைகொடுக்கிறது.

4. பழனி படிக்கட்டு போல செதுக்கிவைத்திருக்கும் கபிலன், வேம்புலி, ரோஸ் ஆகியோரின் உடற்கட்டு. அகவை 35 தொட்டுவிட்ட காரணத்தினால் 2k கிட்ஸுக்கான மோட்டிவேஷன் என்று இதிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் 

5. நான் கடவுளுக்குப்பிறகு தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு, ஆர்யாவுக்கு. பக்காவாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.

6. கலை நேர்த்தி என்பது கல்லிடம் இல்லை, செதுக்கும் சிற்பியிடம் என்பதுபோல இயக்குனரின் கையில் எல்லா பாத்திரப்படைப்புகளும், தேர்வுகளும், நடிப்பும் அவ்வளவு நேர்த்தி. சபாஷ்.

6. ரங்கன் கதாப்பாத்திரமும் அதற்கு மிடுக்கு உடல்மொழியுடன் நியாயம் சேர்த்திருக்கும் பசுபதி என இன்னும் பல 

தனது comfort zone ஐ விட்டு வெளியே வந்து ஒரு படைப்பை வெற்றியுடன் பதிவு செய்ததன் மூலம், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளியாக ரஞ்சித் உருமாறியிருக்கிறார்.    

 

கருத்துகள் இல்லை: